Quantcast
Channel: மெட்ராஸ்பவன்
Viewing all 63 articles
Browse latest View live

கோடை நாடக விழா 2014: சுகமான பொய்கள்

$
0
0



கதை: திருச்சி அருகே குழுமணி எனும் ஊரை சேர்ந்த ராகவ் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது திறமையால் விரைவில் முன்னுக்கு வருகிறான். ஒருசமயம் அந்நிறுவனத்தின் விருந்தளிப்பு விழாவில் நண்பன் வற்புறுத்தியும் குடிக்க மறுக்க,  அதற்கான காரணம் என்னவென்பதை அவனது தந்தை மூலம் அறிகிறான் அலுவலக நண்பன். கல்லூரிக்காலத்தில் சொன்ன சில பொய்கள் கெட்டிக்கார மாணவனான ராகவை எப்படி சோதித்தது, அதன் மூலம் அவனுக்கு மனமாற்றம் நிகழ்ந்தது எப்படி என்பதை சொல்கிறது டம்மிஸ் ட்ராமாவின் ‘சுகமான பொய்கள்’

கதையின் நாயகன் ராகவாக ஸ்ரீராம். கல்லூரிக்காலத்தில் தற்செயலாக செய்யும் தவறுக்கு பொய் சொல்லி சிக்கிக்கொள்ளும் கேரக்டர். உற்ற நண்பன் மோகனாக ப்ரசன்னா. கல்லூரி மாணவர்களின் அப்பாவித்தனம் மற்றும் சேட்டைகளை இயல்பாக பிரதிபலித்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் தந்தை சேதுராமனாக ஸ்ரீதர். ‘A’ Grade வாங்கிய மகனை ஆப்சன்ட் ஆனதாக எண்ணி திட்டியும், ‘D’ Grade வாங்கிய மோகனை பாராட்டி பேசியும் கைத்தட்டலை பெறுகிறார். கல்லூரி ஆசிரியையாக ப்ரேமா சதாசிவம். கண்டிப்பும், கனிவுத்தன்மையும் கொண்டவராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரல் வித்யாசம் தெரியாத பெண்ணாக சில நிமிடங்களே மேடையில் வந்தாலும் சிரிக்க வைத்துவிட்டு செல்கிறார் அர்ச்சனா. ப்ரின்சிபல் வேடத்தில் பாந்தமாய் பொருந்துகிறார் ரவிசங்கர்.

சுகமான பொய்களின் கலாட்டா நாயகர் கிரிதரன். ஸ்ரீராம் மற்றும் பிரசன்னாவை வைத்து தனது காரியத்தை சாதித்து கொள்ளும் ராமசாமியாக முதலில் நம்மை மகிழ வைப்பவர், அதன் பிறகு ஸ்ரீராமின் நலனில் அக்கறை உள்ளவராக நடித்து நெகிழவும் வைக்கிறார். ‘யார் அசல் தந்தை?’ என்றொரு குழப்பமான சூழல் வரும்போது ‘எனக்கு ஒரே கேரா கீதுப்பா’ ‘சரக்கடிக்காமயே எனக்கு சுத்துது’ என்று கிரிதரன் கிறுகிறுக்கும்போது கரவொலி காதை பிளக்கிறது. என்றும் நினைவில் நீங்காத ‘காதலிக்க நேரமில்லை ‘படத்தில் ரவிச்சந்திரனின் தந்தையாக வேடமிட்டு முத்துராமன் நடித்த சுவாரஸ்யமான காட்சிகளை நினைவுபடுத்துகின்றன இந்த கல்லூரி கலாட்டா சம்பவங்கள்.

மேடையை மூன்றாக பிரித்து ஹாஸ்டல், பேஸ்கட் பால் மைதானம், கல்லூரி அலுவலக அறை என நேர்த்தியாக அரங்கை அமைத்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன், மூன்று இடங்களுக்கும் தகுந்தவாறு சிறப்பான ஒளி அமைத்த பாபு ஆகியோரின் உழைப்பு மெச்சத்தக்கது.

குடிப்பழக்கத்தின் மூலம் நிகழும் சீரழிவை பிரச்சாரம் போல நீட்டி முழக்காமல் ரத்தின சுருக்கமாக சொல்லி தனது முத்திரையை மீண்டும் பதித்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவத்சன். வழக்கம்போல இந்த டம்மிஸ் நாடகமும் 90 நிமிடத்தில் நிறைவடைவது ஷார்ட் & ஸ்வீட்.

written for tamil.jillmore.com

........................................................



கோச்சடையான் - விமர்சனம்

வித் யூ விதவுட் யூ

$
0
0



இலங்கையை களமாக கொண்டு கடந்த சில காலமாக திரைக்கு வந்திருக்கும் படைப்புகளில் எந்த தரப்பு நியாயத்தை எப்படி வைத்திருக்கிறார்கள் என்று கண்கொத்தி பாம்பாக பார்ப்பவர்கள் ஒருபுறம், படம் பார்த்த பிறகு ‘சாதாரண சினிமாவுக்கான இலக்கணம் கூட இல்லாமல் அரைவேக்காடாக எடுக்கப்பட்டிருக்கும் இதற்கா இத்தனை விளம்பரம்?’ என்று தலையில் அடித்து கொள்பவர்கள் மறுபக்கம். அப்படி சமீபத்தில் வெளியான படங்கள்தான் மெட்ராஸ் கபே மற்றும் இனம். இவையனைத்தும் ‘இந்தியர்களால் இயக்கப்பட்டவை’. ஆனால் ‘வித் யூ விதவுட் யூ’ வின் இயக்குனர் பிரசன்ன விதனகே ஒரு சிங்களர். சர்வதேச திரைப்பட விழாக்களில் சபாஷ் சான்றிதழ் பெற்றதாக சொல்லப்படும் இந்த படைப்பு தமிழ் – சிங்கள மக்களின் கலாச்சார பாலமாய் விளங்கி இருக்கிறது என்று சொன்னவர்கள் சிலர். உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா? பார்க்கலாம் இனி.

சிங்கள ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று அடகுக்கடை நடத்தி வருபவன் ஷ்யாம். அங்கு நகையை அடகு வைக்க வரும் செல்வி எனும் தமிழ்ப்பெண் மீது நேசம் கொண்டு மணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறான். முதலில் சற்று தயங்கி அதன் பிறகு அவனை கரம் பிடிக்கிறாள். சில நாட்கள் மகிழ்ச்சியாய் செல்கிறது வாழ்க்கை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கணவன் சிங்கள ராணுவ வீரனாய் இருந்ததை கேள்விப்பட்டு திடுக்கிடுகிறாள். வாக்குவாதம் விஸ்வரூபம் எடுக்க நாளடைவில் மனக்கசப்பு முற்றுகிறது. அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை சொல்கிறது இப்படைப்பு.

‘உன் கண்கள் மற்றும் உதட்டில் இருக்கும் நெருப்பு என்னை மயக்கி விட்டது’ என தொடக்கத்தில் செல்வியை வர்ணிப்பார் ஷ்யாம் (சரத் சிறி). அது உண்மைதான் என்பதை சொல்கிறது அஞ்சலி பட்டேலின் தோற்றம். தன் சகோதரர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதை சொல்லி கதறும் காட்சியில் அஞ்சலி அபாரம். விறைப்பாகவே முகத்தை வைத்துக்கொண்டு படம் முழுக்க நடித்து இருக்கிறார் ஷ்யாம். இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். இவருடைய ராணுவ நண்பராக வசந்தா மற்றும் பணியாளாக மகேஸ்வரி. துணை நடிகர்கள் என்று சொல்லிக்கொள்ள இவ்விருவர் மட்டுமே. மிகச்சுமாரான நடிப்புதான்.

‘பார்த்தீர்களா..இலங்கைப்போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை எவ்வளவு சிரமத்து இடையில் பதிவு செய்திருக்கும்’ பாணியில் வந்தது சந்தோஷ் சிவனின் இனம். ஆனால் தமிழர்களின் மன ரணத்தை மேலும் கிளறி சிங்கள ராணுவ வீரர்களை உத்தமர்களாக காட்டியது அப்படம். கொடூரமான கசப்பு பண்டத்தின் மேல் லாவகமாய் தேன் தடவி தரும் அந்த வித்தையை இன்னும் அழகாய் கையாண்டு இருக்கிறார் இயக்குனர் விதனகே.

ஷ்யாம் எனப்படும் ராணுவ வீரனின் கதாபாத்திரம் இங்கே எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா? அவன் அமைதியை விரும்புபவன், மனைவிக்காக அடக்குடையை கூட விற்று இந்தியா சென்று சினிமாக்களை பார்க்க லட்சியத்தை தியாகம் செய்யும் ‘அறிவாளி’. தான் ஏன் ராணுவத்தை விட்டு விலகினேன் என்பதற்கு ஒரு காரணமும் சொல்கிறான். அதாவது சக வீரர்கள் சிலர் தமிழ்ப்பெண் ஒருத்தியை கற்பழித்ததை பார்த்தானாம். அதனை கோர்ட் விசாரிக்கும்போது நண்பர்களை காப்பாற்ற உண்மையை மறைத்தானாம். தமிழ்ப்பெண்களை கற்பழித்த குற்றத்திற்கு இலங்கை ராணுவ வீரர்களை கோர்ட்டில் விசாரித்ததற்கான ஒரே ஒரு ஆதாரத்தை இயக்குனரால் காட்ட முடியுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

அவ்வப்போது சரத் புத்தரை வழிபடும் காட்சி ஒன்று வந்து செல்கிறது. தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு வரும் செல்வியிடம் அவன் கேட்கும் கேள்வி ‘என்ன வேண்டிக்கொண்டாய் உன் கடவுளிடம்? உங்கள் இனம் இந்த அளவிற்கு அழிவை சந்தித்தபோது எங்கே போனார் அந்த கடவுள்?’. அப்போது புத்தரும் கூட மௌனியாகத்தானே இருந்தார் இயக்குனர் விதனகே அவர்களே!!   சரத்தின் பின்னணி மற்றும் நற்குணாதிசியத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதில் இருக்கும் ஆர்வம் செல்வியின் பின்னணியை தெளிவுற சொல்வதில் இயக்குனருக்கு இல்லாமல் போனது ஏன்?


செல்வியின் குடும்பத்தார் ஏற்கனவே பலமுறை மணமான ஒருவரிடம் அவளை  தாரை வார்க்க முற்படுவது, இந்தியா சென்று சினிமாப்படங்கள் பார்க்கும் எண்ணம் கொண்டவளாக செல்வியை சித்தரிப்பதும், சிங்கள ராணுவத்தினர் என்றாலே வெறுப்பை கக்கும் ஒருத்தி அவ்வினத்தை சேர்ந்த ஒருவனை அழுத்தமான காரணம் இன்றி மணம் முடிக்க ஒப்புக்கொள்வதும்….எவ்வளவு சாமர்த்தியமாய் தமிழர்களை மட்டுப்படுத்தி தனது கலைத்திறனை புகுத்தி இருக்கிறார் பிரசன்ன விதனகே!!

மேற்சொன்ன அரசியல், யதார்த்தத்துக்கு புறம்பான கருத்து திணிப்புகளை தவிர்த்து பார்த்தாலும் இது ஒரு சுமாரான படம் மட்டுமே. விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை தியேட்டரில் செல்வியுடன் பார்த்துவிட்டு ‘வேஸ்ட் ஆப் டைம்’ என்று சரத் சொல்லும் வசனம் அருமை. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்தின் தூண். ஒரே மாதிரியான காட்சிகளை ரிப்பீட் செய்வது அலுப்பு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் தொழில்நுட்ப ரீதியில் (மட்டும்) ஒரு நல்ல படத்தை தர முயற்சித்து இருக்கிறார் விதனகே. மற்றபடி சிங்கள – தமிழ் உறவுகளை இணைக்கும் பாலம் என்று இதனை சொல்வதெல்லாம் உச்சக்கட்ட நகைச்சுவை.

written for tamil.jillmore.com

...............................................................




 

ராமானுஜன்

$
0
0






தமிழ்நாட்டின் பொக்கிஷங்களான பாரதி, பெரியார் போன்றோரின் வரலாற்று பக்கங்களை செல்லுலாய்டில் படம் பிடித்து பெருமை சேர்த்த இயக்குனர் ஞான ராஜசேகரனின் மற்றுமோர் உன்னத முயற்சி ராமானுஜன். கும்பகோணத்தில் பிறந்து தனது அபார கணித ஆற்றலால் உலகப்புகழ் அடைந்த ஸ்ரீனிவாச ராமானுஜனின் புகழை திரை வடிவம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். ‘குட்வில் ஹன்டிங் எனும் ஆங்கிலப்படம் ராமானுஜன் எடுக்க இன்ஸ்பிரேஷனாய் இருந்தது’ என அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


‘பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை’ என்று பள்ளி ஆசிரியரை தனது வயதுக்கு மீறிய கணித ஞானத்தால் திணறடிக்கிறான் பாலகன் ராமானுஜன். எனினும் ‘கணிதத்தில் 100/100 வாங்கினால் போதுமா? மற்ற பாடங்களில் பாஸ் ஆகாவிட்டால் என்ன பயன்?’ என ஆசிரியர்களால் ஒதுக்கப்படுகிறான். மகனின் அதீத கணித ஆர்வத்தால் அவன் பட்டப்படிப்பில் தேறுவதே கேள்விக்குறி என்பதால் தந்தையும் எரிந்து விழுகிறார். கும்பகோணம் அங்கீகரிக்காத மேதைக்கு ஹார்டி எனும் பிரிட்டிஷ் பேராசிரியர் பேருதவி செய்கிறார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று தன் அசாத்திய கணித கண்டுபிடிப்புகளால் உலகப்புகழ் பெறுகிறான். ஆனால் தீரா நோய் அவனை வாட்டி எடுக்க மகாகவி பாரதி போன்றே சொற்ப வயதில் இயற்கை எய்துகிறான் இந்த கணிதப்புலி.

வலுவான கேரக்டரை தாங்கி இருக்கும் நாயகன் அபிநய் கூடுமானவரை சிறப்பாக நடித்திருக்கிறார். கணிதத்தை தவிர்த்து மற்ற அனைத்தையும் கசப்பு மருந்தாகவே பார்க்கும் முகபாவம் கச்சிதமாய் பொருந்தி இருக்கிறது. சோகக்காட்சிகளில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம். குட்டி ராமானுஜன் அன்மோல்…அருமையான தேர்வு. மனைவி ஜானகியாக பாமா. சரளமான நடிப்பால் மனதை கவர்கிறார். ராமானுஜனின் தாயாராக சுஹாசினிதான் இப்படத்தின் பெரும்பலம். குடும்பத்தாரிடம் காட்டும் கண்டிப்பு, இறுதியில் மகனுக்காக விசும்பும் இடம் என கும்பகோண வட்டார வழக்கில் மிளிர்கிறார்.

சரத் பாபு, அப்பாஸ், மனோபாலா, ராதாரவி, டி.பி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது. அனைவருக்கும் சிற்சில நிமிடங்களே ஒதுக்கப்பட்டு உள்ளன. நல்லி குப்புசாமியும் இதில் அடக்கம். நிழல்கள் ரவி மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா ஆகியோரின் அனுபவம் மிக்க நடிப்பு நன்று. இதுபோக பல ஆங்கில நடிகர்களும் நடித்துள்ளனர். ராமானுஜனுக்கு உதவும் பேராசிரியர் ஹார்டி வேடத்தில் கெவின் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.


ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை ‘இளையராஜா ஏனிங்கு இல்லை’ என கேட்கத்தூண்டும் அளவிற்கு இருக்கிறது. கும்பகோணம் முதல் கேம்ப்ரிட்ஜ் வரை இயல்பாய் பயணித்து பெரும்பாலான இடங்களில் கண்களுக்கு விருந்தளிக்கிறது சன்னி ஜோசப்பின் கேமரா.

சிறுவன் ராமானுஜன் சட்டென மெட்ரிக் படித்த இளைஞனாய் வந்து நிற்பது உறுத்தல். இடைப்பட்ட வயதினை உடைய காட்சி ஓரிரண்டையாவது சேர்த்திருக்கலாம். ஆங்கில நடிகர்கள் அனைவரும் (டப்பிங் உதவியுடன்) தமிழில் உரையாடுவது போல காட்சிகளை வைத்திருப்பது ஏனென்று தெரியவில்லை. தமிழர்களிடம் அப்படி பேசுவது போக தங்களுக்குள்ளும் தமிழில் உரையாடுவது ஆங்கில டப்பிங் படம் பார்க்கும் உணர்வை ஏகத்துக்கும் தந்திருப்பது குறையாக படுகிறது. எப்போதும் போல சப் டைட்டில் போட்டிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.

‘ராமானுஜனின் இறுதி சடங்கிற்கு அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரவில்லையே? பரவாயில்லை. அவனுக்கு அனைத்து எண்களும் பிடித்தமானவைதான்’,  ‘நான் பெருமாள் என்ன செய்ய போகிறாரோ என்று எண்ணிக்கொண்டு இருக்க, நீ சாரங்கபாணி பட்டர் குறித்து கேட்கிறாயே’ போன்ற அழுத்தமான வசனங்கள் மறக்க முடியாதவை.

கும்பகோணம் ஒதுக்கிய மாமேதை எப்படி உலகப்புகழ் பெற்றான் என்பதை தனது பாணியில் கடும் ஆராய்ச்சி செய்து சித்திரமாக்கி இருக்கிறார் ஞான ராஜசேகரன். தற்போது நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம் பாஸ்வோர்ட் உள்ளிட்ட முக்கியமான அறிவியல் முன்னேற்றங்களுக்கு ராமானுஜத்தின் கணித சூத்திரங்கள் தான் காரணம் என்று இறுதியாக டைட்டில் போடுவதை பார்க்கையில் தமிழர்கள் அனைவரும் கம்பீரமாய் தலை நிமிரலாம்.


written for tamil.jillmore.com

......................................................................................





சிகரம் தொடு

$
0
0



சஸ்பென்ஸ்/ஆக்சன் த்ரில்லர் கதைகள். அதற்கேற்ற நல்ல பட்ஜெட். தேர்ந்த துணை நடிகர்கள். ஃப்ரெஷ் ஆன நாயகிகள். தற்போதைக்கு விக்ரம் பிரபுவின் மச்ச ரேகை இப்படித்தான் இருக்கிறது. இவன் வேற மாதிரியை விட அரிமா நம்பி சில படிகள் உயர்ந்து இருந்தது. சிகரம் தொடு....மேலும் சிறப்பாய்.

நேர்மையான போலீஸ் அதிகாரி என்று பெயரெடுத்த செல்ல பாண்டியன் கலவரத்தை அடக்கும்போது தனது காலை இழக்க வேண்டி வருகிறது. எனவே குற்ற ஆவண காப்பகத்தில் கோப்புகளை பார்க்கும் பிரிவில் வேலையை தொடர்கிறார். தனது மகன் முரளி பாண்டியன் மாநிலம் போற்றும் சிறந்த போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது அவரது கனவு. தந்தைக்கு நேர்ந்த கதியால் காவல் துறை வேலையே வேண்டாமென முடிவெடுக்கிறான் முரளி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவனை காக்கிச்சட்டை போட வைக்கிறது. அதன் பிறகு பொறுப்பை உணரும் முரளி புறநகர் ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து கைவரிசை காட்டும் நபர்களை ஒடுக்க எம்மாதிரியான திட்டங்களை வகுத்து வாகை சூடுகிறான் என்பதை சொல்கிறது சிகரம் தொடு.

போலீஸ் அதிகாரி என்றால் ACP யாக இருக்க வேண்டும், ஆர்ம்ஸை முறுக்கி அதிரடி வசனம் பேச வேண்டும், அரசியல்வாதியை அடித்து துவைக்க வேண்டும் உள்ளிட்ட ஹீரோயிசங்களை அப்புறப்படுத்தி அடக்கி வாசித்து இருப்பதற்கே விக்ரமை பாராட்ட வேண்டும். நடிப்பா? அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்குற கடைல கெடைக்கும் என சொல்லி தப்பித்து வந்தவர் ஒருவழியாக இப்போதுதான் முழித்துக்கொண்டு இருக்கிறார். சுமாராக நடிப்பும் எட்டிப்பார்க்கிறது. நெகிழ்வான தந்தையாக சத்யராஜுக்கு இன்னொரு கௌரவமான கதாபாத்திரம். அழகிற்கு நாயகி மோனல். அசட்டுத்தனமாக எதுவும் செய்யாததே அழகுதான்.

ஹீரோவின் நண்பனாக சதீஷ் ஃப்ளைட்டிலும், சாமியாரிடமும் செய்யும் அலப்பறை ஜாலி பட்டாசு. ஆனால் சந்தானம் பாணியில் சக நடிகர்களை நக்கல் விடுவது வேலைக்கு ஆகாது. அட்மாஸ்பியருக்காக ஈரோடு மகேஷ். சில வார்த்தைகள் பேசினாலும் சின்னத்திரை எஃபெக்ட் வருவதை தவிர்க்க வேண்டும். இரட்டை கொள்ளையர்களில் ஒருவராக இயக்குனர் கௌரவே நடித்திருக்கிறார். பெரிதாக குறை இல்லாவிட்டாலும், அனுபவம் மிக்க நடிகரை போட்டிருந்தால் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும். லொள்ளு சபா மனோகர், சிங்கமுத்து இருவரும் கிடைத்த சான்ஸை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.


விக்ரம் பிரபுவின் காதல், சத்யராஜின் நேர்மை, சதீஷின் காமடி என சீராய் பயணிக்கும் முதல் பாதி அதன் பிறகு இன்னும் விறு விறுக்கிறது. தொடர்ந்து கொள்ளை நடக்கும்போது ஏ.டி.எம். உள்ளே முகத்தை மறைக்காமல் ஸ்கிம்மர் மற்றும் கேமராவை ஒரு நபர் பொருத்துகிறார். அவ்வளவு அசால்ட்டாகவா இருக்கிறது காவல் துறை? போலி க்ரெடிட் கார்ட் அடிக்கும் நபர் எந்த விசாரிப்பும் இன்றி விக்ரமை சந்திக்கும் மறுநிமிடம் ஓக்கே என்பது, தனது காதலி இருக்குமிடத்தை லாக்கப்பில் இருக்கும் க்ரிமினல்கள் காதில் விழும்படி விக்ரம் சொல்வது, முன்பின் அறியாத நபரிடம் மருத்துவமனை ஊழியர் டாக்டரின் செல்போன் நம்பரை தருவது என ஆங்காங்கே அல்வா பொட்டலங்களை மடித்து தந்திருக்கிறார்கள்.

இமானின் பின்னணி இசை பெருமளவு ரசிக்க வைக்கிறது. 'டக்கு டக்கு'மற்றும் 'சீனு சீனு'பாடல்கள் யூத் ஸ்பெஷல். 'அன்புள்ள அப்பா'உணர்வுபூர்வம். விஜய் உலகநாதனின் கேமரா இன்னொரு நாயகனாய். சண்டைக்காட்சிகள் அளவாய் இருந்தாலும் அதிர்வு.

கதைக்கு முக்கியத்துவம் தந்து சின்ன சின்ன நடிகர்களையும் சரியான வேடத்தில் நடிக்க வைத்திருப்பதால் சிகரம் தொடு தொய்வின்றி நகர்கிறது. நல்ல சப்ஜெக்ட்டை தேர்வு செய்தாலும் நடிப்பில் கோட்டை விட்டு வந்த விக்ரம் பிரபு இம்முறைதான் ஓரளவு ரூட்டை பிடித்திருக்கிறார். சிகரத்தை தொட வருடங்கள் ஆகலாம். ஆனால் அதற்கான பயணத்திற்கு இந்தப்படம் இன்னொரு படிக்கல்.



Written for tamil.jillmore.com



ஸ்பெஷல் மீல்ஸ் (13/10/14)

$
0
0


சங்கமம்:



மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா இம்மாதம் 26 ஆம் தேதி ஞாயிறு ஆண்டு மதுரை மாநகரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் பொறுப்பேற்று இந்த நிகழ்வை நடத்துகின்றனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் தா.கு. சுப்ரமணியம் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர். பதிவுலக நண்பர்கள் அளவளாவி கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
...............................................................................

தீயா வேலை செய்யணும் குமாரு:
ஜில்மோர் சினிமா தளத்தில் தொடர்ந்து எழுதி வருவதால் மெட்ராஸ் பவனில் விழுந்திருக்கும் இடைவெளிக்கு மன்னிக்கவும் நண்பர்களே. சில தினங்களுக்கு முன்பு அண்ணா சாலை புஹாரி வாசலில் அண்ணன் கே.ஆர்.பி. செந்திலுடன் நின்று கொண்டிருந்தேன். 'நீங்க சிவகுமார்தான? மெட்ராஸ் பவன்....'என்று சந்தேகத்துடன் என்னை நோக்கி தன் நண்பருடன் வந்தார் ஒருவர். வேல்முருகன் என்று அறிமுகம் செய்துகொண்டார். 'ஆமா...நான்தான்...'என்று இழுத்தேன். ஒருவேளை என் பழைய பதிவை படித்த பாதிப்பில் மண்டையை உடைத்து மாவிளக்கு வைக்க வருகிறாரோ என்ற பதட்டம் அப்பி இருந்தது. ஆனால் அப்படி அசம்பாவிதம்  ஏதும் நடக்கவில்லை. இனிய சந்திப்பாகவே முடிந்தது. 'நீ செட் பண்ண ஆளுதான? ஏன்யா உனக்கு இந்த வெளம்பரம்'என ரவுசு விட்டார் கே.ஆர்.பி. சத்திய சோதனை!! பதிவு எழுதி வாரங்கள்/மாதங்கள் ஆகியும் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும் இதயங்களுக்கு நன்றி.

இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால் இனி மெட்ராஸ் பவன் ஷட்டரை ஏற்றி போதுமான இடைவெளியில் பதிவுகள் போட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதே. சினிமா சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், விமர்சனங்கள், மேடை நாடக விமர்சனங்கள் உள்ளிட்டவை கீழ்க்கண்ட தளங்களில் பெரும்பாலும் எழுதப்படும் என்பதால் தங்கள் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:



......................................................................

கலகலப்பு:


'மின்னல் வரிகள்'வலைப்பூ எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களின் புத்தக வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. 'சரிதாயணம் - 2'மற்றும் 'நான் இருக்கிறேன் அம்மா'டூ இன் ஒன் புத்தகமாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இயல்பாகவே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பாலகணேஷ் அவர்களிடம் இருந்து வெளிவந்திருக்கும் 'நான் இருக்கிறேன் அம்மா'எனும் தொகுப்பு நிச்சயம் பேசப்படும் என நம்புகிறேன். குமுதம் ரிப்போர்ட்டரில் 'அகம் புறம் அந்தப்புரம்'தொடர் மற்றும் 'சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்'ஆகியவற்றை எழுதிய முகில், வலைப்பதிவர் சேட்டைக்காரன், பேராசிரியர் ஆதிரா முல்லை மற்றும் கமலம் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வேட்டைக்காரன் கெட்டப்பில் என்ட்ரி தந்து சிரிப்பின் மகத்துவத்தை விளக்கினார் சிரிப்பானந்தா. 

விழாவின் இடையே ஃப்ளாஷ் என்ட்ரி தந்த இயக்குனர் கேபிள் சங்கர். பப்ளிசிட்டியின் மகத்துவத்தை விசுவலாய் காண்பித்து விருட்டென வீட்டை நோக்கி பறந்தார். கே.ஆர்.பி.செந்தில், ரூபக், ஸ்கூல் பையன், முரளிதரன், பட்டிக்காட்டான் ஜெய், மதுமதி, அரசன், கோவை ஆவி உள்ளிட்ட பதிவர்கள் மற்றும் பாலகணேஷ் சார் மீது அன்புகொண்ட உள்ளங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேடையில் அனைவரும் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைத்தது.

தொகுப்பாளர் உயர்திரு. சீனு அவர்கள் நிகழ்ச்சி நடத்துவதில் முன்பை விட பெர்பெக்சன் காட்டி இருந்தது பாராட்டத்தக்கது. 'இன்னும் யாராவது பேசணுமா? உங்களுக்கு ஒரு வாய்ப்பு'என பிதாமகன் சூர்யா போல சீனு அழைக்க சகோதரி சமீரா 'ஓரம் போய்யா'என்று அவரை கிளப்பிவிட்டு அருமையாக பேச ஆரம்பித்தார். 'அப்ப சேட்டைக்காரன் யூத் இல்லையா?'ஃப்ளாஷ்பேக்கை அவர் விவரித்தது நல்ல காமடி. 

எழுத்தாளர் முகிலுடன் புத்தக வாசிப்பு குறித்து நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டேன். மொத்தத்தில் நிறைவான சந்திப்பாய் அமைந்தது.
 .........................................................................................

பிரியாணி: 
அண்ணா சாலை புஹாரியை நவீனப்படுத்தி மீண்டும் தீவிரமாக பிரியாணி சர்வீசை தொடர ஆரம்பித்த சமயம். பிரியாணி, ராய்த்தா வந்தது. கொஸ்துவை காணவில்லை. வினவினால் 'அது விரைவில் கெட்டுப்போகிறது. எனவே கஸ்டமர்கள் நலன் கருதி....'என்று தமாசு செய்தார் ஊழியர். 'அதை சாப்பிட்டா சைட் டிஷ் கேக்க மாட்டாங்க. அதுக்குத்தான?'என்று நான் சொன்னதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது. அப்போதெல்லாம் பிரியாணி ருசியாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில விசிட்களில் தரம் குறைந்து இருக்கிறது. சாப்பிட்ட பிறகு நாக்கில் கசப்பு நீண்ட நேரம் ஒட்டிக்கொள்கிறது. அருகிலேயே தலப்பாகட்டி வேறு திறக்கப்பட்டு இருக்கிறது. விழித்துக்கொண்டால் மட்டுமே புஹாரி பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
.............................................................................

மெட்ராஸ்:
'ஆட்டோவுக்கு மீட்டர் அவசியம்'என்று உச்சநீதிமன்றம் சுத்தியலால் ஓங்கி அடித்தாலும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை மாணிக் பாட்சாக்கள். முன்பைவிட ரேட்டை ஏற்றியதுதான் மிச்சம். அடுத்த வருடத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் கேட்பதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. முன்பெல்லாம் 'ரவுண்டா குடுங்க'என்று மீட்டர் 21 ரூபாய் காட்டினால் முப்பதை கேட்பார்கள். இப்போது அவர்கள் பாஷையில் ரவுண்டு என்றால் 100, 150 தான். பக்கத்து ஏரியாவுக்கு பக்கத்து ஏரியா என்றால் நூறு. அதற்கும் பக்கத்து ஏரியா அல்லது இரவு ஒன்பதை தாண்டினால் 150 என அதிகாரபூர்வமற்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். நேர்மையாய் கட்டணம் வசூலிக்கும் மிகச்சில ஓட்டுனர்கள் மட்டுமே சராசரி வசதி படைத்த மக்களின் ஆபத்பாந்தவர்களாய் இருக்கிறார்கள். வாழ்க. 

குறை அவர்களிடம் மட்டுமில்லை. நம் 'பாமரர்'களையும் சும்மா சொல்லக்கூடாது. தி.நகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் அலைகடலென கூட்டம். சற்று ஓரமாய் நின்று கிட்டத்தட்ட 20 ஆட்டோக்களை கவனித்தேன். ஓட்டுனர் பேரம் பேச தயாராக இருந்தால் கூட மக்களுக்கு விருப்பமில்லை. சொன்ன பணத்திற்கு சரியென தலையை ஆட்டிவிட்டு சரக் சரக்கென ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். ஐ.டி. துறையை சேர்ந்தவர்கள்தான் ஆட்டோ கட்டண அராஜகத்துக்கு காரணம் என்று அதிசயமாய் கண்டுபிடித்த எடிசன்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மால்கள், ரங்கநாதன் தெரு போன்ற ஏரியாக்களில் அமோக வசூலை பார்த்து வருவதால் இனி ஆட்டோக்காரர்கள் இந்த அநியாய ரேட்டை குறைக்க  வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. 
 .........................................................................
 
அன்பே சிவம்:

அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு வீடு அல்லது உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவை கச்சிதமாக கொண்டு போய் சேர்ப்பதில் உலகப்புகழ் பெற்றவர்கள் மும்பை டப்பாவாலாக்கள். தங்கள் வாடிக்கையாளர்கள் சாப்பிடாமல் வைக்கும் உணவு வீணாகாமல் போக 'ஷேர் மை டப்பா'கான்சப்டை செயல்படுத்த ஆரம்பித்து மாதங்கள் ஆகின்றனவாம். பசியில் வாடும் எளியோருக்கு அந்த உணவை பகிர்ந்து அளித்துவிட்டு தங்கள் வேலையை நிறைவு செய்கிறார்கள் டப்பாவாலா சகோதரர்கள். ஹாட்ஸ் ஆஃப்.
 

 ...............................................................................

முன்தினம் பார்த்தேனே:

இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தியேட்டர்களில் எட்டிப்பார்க்கவில்லை. 'யான்'பாதிப்பு இன்னும் நம்மைப்பிடித்து ஆட்டுவதால் ரெஸ்ட் தந்துவிட்டார்கள் போல. குபீர், ஜமாய், வெண்ணிலா வீடு, பொலிடிக்கல் ரவுடி என சரமாரியாக குட்டிப்படங்கள் ரிலீஸ் ஆயின. 

அண்ணா சாலை சாய் சாந்தியில் 'குபீர்'படம் நைட்ஷோ பார்த்து மண்டை காய்ந்து போனேன். இது போதாதென்று அவ்வப்போது மூட்டைப்பூச்சி கடி வேறு. படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஆங்காங்கே குறட்டை சத்தம். சிலர் இருக்கைகளுக்கு கீழே தரையில் துயில் கொண்டனர். 'படமாடா இது?'என்று புலம்பி தள்ளிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு போக விடாமல் தோஸ்துகள் ஐந்தாறு முறை அழுத்தி அமர வைத்தது அந்தோ பரிதாபம். அந்த அமர (விடாத) காவியத்தின் விமர்சனம்:


கேரளத்தில் பிஜு மேனன் நடித்த 'வெள்ளி மூங்கா'நல்ல வரவேற்பை பெற்ற செய்தி கிடைத்ததால் வேளச்சேரி ல்யூக்ஸ் (சத்யம்) அரங்கில் படத்தை பார்த்தேன். அரசியல் சப்ஜெக்டை நல்ல நகைச்சுவை கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் ஜிபு ஜேகப். பிஜு மேனனின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. எனது விமர்சனம்:


.......................................................................................


 


மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014 - நிகழ்ச்சிநிரல்

$
0
0




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,

வரும் ஞாயிறு (அக்டோபர் 26) அன்று மதுரையில் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. கடந்த இரு வருடங்கள் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு அளித்த ஆதரவினை மதுரை நிகழ்விற்கும் தந்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல் விவரங்கள்:



பதிவர் சந்திப்பு  நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை சுமாராக நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிகழ்ச்சி நிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.
fff
பதிவர்  சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரங்களை வருகிற நாட்களில் பதிவில் பகிர்கிறோம். நிகழ்ச்சிகளை நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம் அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
fff
வெளியூரிலிருந்து  வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள் தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
ffff
பதிவர்  திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.
fff
அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள், சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.வெளியூர்  பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
 fff
மேலும் விவரங்களுக்கு:


பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்:

கீதா நடன கோபால நாயகி மந்திர்,
எண் 3, தெப்பக்குளம் மேற்கு வீதி,
மதுரை.

தொடர்புக்கு:
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981
thaiprakash1@gmail.com
....................................................................

 

கத்தி

$
0
0




சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல சோதா மசாலா படங்களுக்கு மட்டுமே நம்மூரில் பெரும்பாலும் முட்டுக்கட்டைகள் விழும். அதற்கு இன்னொரு உதாரணம் இது. 'கத்தி வரக்கூடாது'என மாதக்கணக்கில் வாழ்வுரிமை மைந்தர்கள் கத்தியே ஓய்ந்தனர். எப்படியோ கடைசி பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடித்து தியேட்டர் வந்து சேர்ந்து விட்டது பொட்டி.

கதை: கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பும் கைதியை பிடிக்க இன்னொரு கைதியான கதிரேசனின் உதவியை நாடுகிறது போலீஸ். காரியத்தை முடித்து தந்துவிட்டு தானும் தப்பி சென்னை வந்து சேர்கிறான். அங்கே தன்னைப்போலவே இருக்கும் ஜீவானந்தத்தை காண நேரிடுகிறது. கைது செய்ய துடிக்கும் கொல்கத்தா போலீஸிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஜீவாவை பயன்படுத்திக்கொள்கிறான் கத்தி என்கிற கதிரேசன். ஒரு கட்டத்தில் ஜீவாவின் பின்னணியை அறியும் கத்தி தன்னூத்து எனும் சிற்றூர் விவசாயிகளின் பிரச்னையை எப்படி தீர்க்கிறான்?

விஜய்க்கு அரசியல் ஆசை..மன்னிக்கவும் மக்கள் சேவை செய்வதற்கான ஆசை துளிர்விட்ட காலத்தில் இருந்தே சமூகம் சார்ந்த வசனங்கள் அவரது படங்களில் சற்று அடர்த்தியாக இடம்பெற ஆரம்பித்தன. ஆனால் வானம் வசப்படவில்லை.  சமீபத்தில் அந்த கலரை மாற்றி துப்பாக்கியை தந்தார் முருகதாஸ். சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது விஜய்யின் முறை. தன்னை மக்களின் தளபதியாக பிரகடனம் செய்யும் படைப்பு ஒன்று அவசியம் என இயக்குனரிடம் அடித்து  சொல்லி இருப்பார் போல. அதற்காக முருகதாஸ் தொட்டிருப்பது 'கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி'சப்ஜெக்டை.

ஜில்லாவில் டல்லாய் இருந்த விஜய் மீண்டும் பிரகாசமாகி இருக்கிறார். 'ஜெயில்ல இருந்து எப்படி ரிலீஸ் ஆன?'எனும் கேள்விக்கு 'நானே ரிலீஸ் பண்ணிக்கிட்டேன்'என்பதுதான் ஓப்பனிங் பஞ்ச். அருமையான ப்ளாக் காமடி. எம்.ஜி.ஆர். பட பாணியில் இரண்டு விஜய். அதாவது ஒரு உரையில் இரண்டு கத்தி. ஒன்று மிகச்சுமாரான கூர்மையுடன். இன்னொன்று பெயருக்காக மட்டும். எப்போதும்போல ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிற்காமல் சேட்டை செய்து கொண்டே ஆரம்பகட்ட காட்சிகளில் வந்து போகிறார் விஜய். சலிப்புதான் மிஞ்சுகிறது. 'பெட்டி எடுத்துட்டு உள்ளே வா'என கத்தும்போது 'உள்ளே போ'பாட்சா எட்டிப்பார்க்கிறார். 'ஹெஹ்ஹே..ஐ ஐம் வைட்டிங்'எனச்சொல்லும் இடைவேளைக்கு முந்தைய வசனம்... ஹெஹ்ஹே. 

சென்னை நகர ப்ளூ ப்ரிண்ட்டை பார்க்கும்போது டேபிளுக்கு அடியில் குழாயை பார்ப்பது வில்லேஜ் விஞ்ஞானித்தனம். சென்னையை கதிகலங்க வைக்க புழல் ஏரி குழாய்க்குள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் அறப்போராட்டம் செய்வது புல்லரிப்பின் உச்சம்.

நாயகி சமந்தா, நகைச்சுவை சதீஷ், வில்லன் நீல் நித்தின் ஆகியோர் அட்மாஸ்பியருக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கைதியிடம் ஜெயிலின் ப்ளூ ப்ரிண்ட்டை தரும் மங்குனி காவலதிகாரிகள், '17 வயது சிறுவனை வைத்து உன்னை கொன்று விடுவேன். அவனுக்கு பிரச்னை இல்லை. சில வருடம் சிறார் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான்'என்று விஜய் சொல்லும் அபத்தமான வசனம், ஷங்கர் பட பாணியில் நீளும் காட்சிகள் என இன்னும் பல 'ஸ்ஸ்....அப்பாடா'தருணங்கள் பஞ்சமின்றி.

அனிருத்தின் இசையில் 'செல்ஃபி புள்ள'மட்டும் சுமார். மற்றவை சுத்தமாய் எடுபடவில்லை.

கிராமத்து நீராதாரத்தை கார்ப்பரேட் கம்பனி முதலைகள் எப்படி உறிஞ்சி கொழுக்கிறார்கள் எனும் வலுவான கதையை கையில் எடுத்து இருந்தாலும் அதனை சரியாக ப்ரசன்ட் செய்ய அநியாயத்திற்கு தடுமாறி இருக்கிறார் முருகதாஸ். 'எதிர்காலத்தில் தீவிர அரசியல் குதிப்பேன்'என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் விஜய். 2G ஊழல் செய்தவர்களை வெளிப்படையாக சாடும் வசனமும் உண்டு.

கோலா கம்பனி விளம்பரத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோவும், கார்ப்பரேட் கம்பனிகளுக்கு படம் செய்யும் இயக்குனரும்  அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிரடியாக தாக்கி படம் பண்ணி இருப்பது விந்தைதான். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து மாமா பிஸ்கோத்து தந்திருக்கிறது கத்தி.

...................................................................................

Written for tamil.jillmore.com



பூஜை

$
0
0





பக்திமயமான டைட்டில், பவ்யமான நாயகனின் குடும்பத்தார் என ஊதுபத்தி மணம் கமழ ஆரம்பிக்கும் ஹரியின் படங்கள். ஆனால் க்ளைமாக்ஸ் முடிந்ததும் சூறைக்காற்றின் பிடியில் இருந்து தப்பியவர்களை போல 'இப்ப நான் எங்க இருக்கேன்?'என கேட்க வைத்துவிடும். சாமி, வேல், சிங்கம் என கெடா விருந்து படைத்த  ஹரி அருள், சேவல், வேங்கை போன்ற வேகாத பொங்கல்களையும் தந்திருக்கிறார். சந்தேகமின்றி பூஜை இரண்டாம் வகைதான்.

கதை: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மார்க்கெட் பகுதிகளில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்பவன் பொள்ளாச்சியை சேர்ந்த அன்னதாண்டவம். கௌரவத்திற்கு இப்படி ஒரு தொழில் செய்தாலும் கூலிப்படையை ஏவி  கொலைகள் செய்வதுதான் இவனது முக்கிய வேலை. அதுபோக கோவில் ஒன்றின் அறங்காவலராகவும் இருக்கிறான். அன்னதாண்டவம் செய்யும் கிரிமினல் வேலைகளை தவிடுபொடியாக்க தீயாய் கிளம்புகிறான் வாசு. இருவருக்கும் இடையே கொழுந்துவிட்டு எரிகிறது பகை. நீதி வென்றதா? தர்மம் நிலைத்ததா?

பொதுவாக ஹரியின் நாயகர்கள் 'அதோ பாரு ரெண்டு வெள்ளை காக்கா ஜொய்யுனு பறக்குது'என்று தந்தைகள் சொன்னால் 'நீங்க சொன்னா சர்தானுங்..'என்று மறுப்பு பேசாத சமத்துகளாக இருப்பார்கள். ஒரு மாற்றத்திற்காக வாசு எனும் விஷாலை அம்மா பிள்ளையாக்கி இருக்கிறார் இயக்குனர். எனவே இது வழக்கமான ஹரி பட டெம்ப்ளேட்களை தகர்த்து எறிந்து புரட்சியை படைத்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

'வாசு...உன் பக்கத்ல இருக்குற ந்யூஸ் பேப்பரை கொஞ்சம் தாயேன்'என்று அம்மா, அண்ணி, காதலி, கணக்குப்பிள்ளை, செல்ல நாய் மணி என யார் உதவி கேட்டாலும் 'இதோ கெளம்பிட்டேன்'என்று ஸ்கார்பியோவில் பெட்ரோல் கூட போடாமல் அவினாசி, காந்திபுரம், பொள்ளாச்சி, திருப்பூர் ஏரியாக்களில் இருக்கும் அனைத்து ரவுடிகளின் வீட்டிற்கு முன்பு நின்று 'இது என் ஊருடா. என் மண்ணுடா. எனக்கே பேப்பர் இல்லையா? நாந்தன்டா வாசு. முடிஞ்சா முன்னூறு அருவாள எம்மேல வீசு'என்று உடல், பொருள், ஆவி பறக்க ஹை டெசிபலில் கதறி துடிக்கிறார் விஷால். ஆனால் தியேட்டரில் நோ விசில். ஆக்சன் காட்சிகள் அனைத்திலும் ஸ்ப்ரிங் போர்டில் படுத்து எழுகிறார்கள் ஸ்டன்ட் மேன்கள்.

உலக நாயகி ஸ்ருதி க்ளாமரில் இதயத்தை கவ்வுகிறார். ஆனால் வசன உச்சரிப்பு உசுரை வாங்குகிறது. 'ஒன் இயர்'என்பது 'பண்ணையார்'என்று காதில் விழுகிறது. கவுண்டமணி செந்தில் பாணியில் சூரி, ப்ளாக் பாண்டி அடிக்கும் லூட்டிகளுக்கு அவர்களே சிரித்தால்தான் உண்டு. முகேஷ் திவாரியின் வில்லத்தனத்தில் ஆந்திரா காரம். ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் என டஜன் கணக்கில் கௌரவ நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் ராதிகாவிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. மொட்டைத்தலை, கூலிங் கிளாஸ் சகிதம் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் சத்யராஜ் தரும் என்ட்ரியை பார்க்கும்போது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் விறைப்பாக நடப்பதோடு நிறுத்திக்கொண்டு அல்வா தந்துவிட்டார்.

யுவனின் இசையில் எந்தப்பாடலும் தேறவில்லை. கோவை, பாட்னா, பொள்ளாச்சி ஆகிய இடங்களின் முக்கிய பகுதிகள் ஏரியல் மற்றும் லாங் ஷாட்களில் வந்து போகின்றன. அவை திரையில் திட்டு திட்டாய் தெரிகின்றன. சாதாரண கேமரா கோணத்தில் இருக்கும் சில காட்சிகளும் இதே போன்றுதான் இருக்கின்றன. விறுவிறுப்பாய் காட்சிகளை நகர்த்த காட்டி இருக்கும் ஆர்வத்தை தெளிவாய் எடுப்பதிலும் காட்டி இருக்கலாம்.

முதல் பாதி மிகச்சுமார். இடைவேளைக்கு பிறகு மெகா சீரியல் போல ஜவ்வாய் இழுக்கிறது. ஹீரோ, வில்லன், அடியாட்களின் கால்களில் மட்டுமின்றி அவர்களது கார் டயர்களுக்கு அடியில் கூட அண்டா அண்டாவாக வெந்நீரை கொட்டி விட்டார் போல இயக்குனர் ஹரி. 'எங்களுக்கு வேலையில்ல. சும்மா நிக்க நேரமில்ல'என அலறிக்கொண்டே தெருத்தெருவாய் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி ஓய்ந்து மாய்ந்து நம்மை கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு அப்படி என்ன கொலவெறியோ?

தெலுங்கிலும் 'பூஜை'டப் செய்யப்பட்டு இருப்பதால் ஸ்ருதி, பாட்னா சிறப்பு வில்லன், சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை உள்ளிட்ட தேவையான (!) மசாலாக்களை தூவி தமிழ் ரசிகர்களை பூ மிதிக்க வைத்திருக்கும் ஹரி அவர்களே.. தமிழ்நாட்டில் இருக்கும் தெருக்களை வலம் வந்தது போதும். அடுத்து நாம டெல்லில மீட் பண்ணுவோம். குஞ்சாணி. குஞ்சாணி.
.............................................................

Written for tamil.jillmore.com



மூன்றாமாண்டு வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை 2014 நேரலை

$
0
0





வணக்கம் நண்பர்களே,

இன்று (26/10/2014) மதுரையில் நடைபெற்றுவரும் மூன்றாமாண்டு வலைப்பதிவர் சந்திப்பின் நேரலையை காண கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்:





இந்த லிங்க்கை தங்கள் வலைப்பூக்களிலும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


ஸ்பெஷல் மீல்ஸ் (13/11/14)

$
0
0

மனிதனின் மறுபக்கம்:


அர்னாப் கோஸ்வாமி. பேரைக்கேட்டால் அதிருகிறதோ இல்லையோ. இரவு ஒன்பது மணிக்கு ந்யூஸ் ஹவரில் ஹைடெசிபல் சப்தம் எழுப்பி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நம்மை போர்க்கால பதற்றத்தில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். ஒவ்வொரு முறையும் ந்யூஸ் ஹவரில் இவர்  அலற ஆரம்பிக்கும்போது வீட்டுப்பெண்களின் அர்ச்சனையை வாங்காமல் அந்நிகழ்ச்சியை காணும் ஆண்கள் அரிது. 'வந்துட்டானா அர்னாப்பு ..'என டென்சன் ஆகி காதை பொத்திக்கொண்டு பக்கத்து அறைக்கு ஷிஃப்ட் ஆகி விடுவார் என் அம்மா. 'நீ சும்மா ஸ்க்ரீன்ல வந்தாலே திக்குன்னு இருக்கும். ஏன்யா இப்ப பேசுன?'  என்று அதிரும் அளவிற்கு தேசிய அளவில் பெயர் வாங்கிய அர்னாப்பின் பின்னணியை புட்டு புட்டு வைக்கிறது இந்த பதிவு. மிக நீண்ட கட்டுரை என்றாலும் கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. படித்துப்பாருங்கள்.


......................................................................

நில், கவனி, செல்லாதே: 
சென்ற வாரம் எஸ்கேப்பில் படம் பார்க்க எக்ஸ்ப்ரஸ் அவின்யூ சென்றிருந்தேன். அப்போது சுமார் ஐந்து வயதுள்ள சிறுமி ஒருத்தி எஸ்கலேட்டரின் கீழே நின்றவாறு கையை உயர்த்தி அழுது கொண்டிருந்தாள். என்னவென்று அவள் கை காட்டிய திசை நோக்கி பார்த்தால் 'அங்கேயே இரு. அப்பாவை அனுப்பறேன்'என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் அவளது தாயார். சிறுமியின் அருகில் என்னைத்தவிர எவருமில்லை. தன்னை தனியே தவிக்க விட்டு போய் விட்டார்களே எனும் சோகம் அவளது முகத்தில் அப்பி இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறும்போது மகளையும் உடன் அழைத்து செல்லாமல் இப்படி ஒரு அசாதாரண சூழலை உருவாக்கிவிட்டு கூலாக நின்று கொண்டிருந்த தாயை இதுவரை நான் கண்டதில்லை.  

கொஞ்சம் அசந்திருந்தால் எஸ்கலேட்டரில் ஏறிச்செல்ல அச்சிறுமி எத்தனித்து இருப்பாள். அவளை சற்று சமாதானம் செய்துவிட்டு பத்திரமாய் தூக்கிச்சென்று மகராசியிடம் ஒப்படைத்தேன். சாதாரண சம்பவம் நடந்தது போல தேங்க்ஸ் கூறினார் அப்பெண்மணி. என்னால் புன்முறுவல் கூட பூக்க முடியவில்லை. சில நிமிடத்திற்கு முன்பு கன்னம் சிவக்க அழுது தீர்த்த அந்த குட்டி ரோஜா தாயிடம் சேர்ந்த மறுகணம் அனைத்தையும் மறந்து சகஜமாய் சிரித்து பேச ஆரம்பித்ததைக்கண்டு பூரித்துவிட்டு இடம் பெயர்ந்தேன். குழந்தைகள் மற்றும் வயதான பெண்மணிகளை மால்களுக்கு அழைத்துவரும் பிரகஸ்பதிகள் எஸ்கலேட்டர் அருகே நின்று கொண்டு அதில் ஏறுவதற்கு வலுக்கட்டாய பயிற்சி அளிக்கும் ஆபத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். லிப்டில் அழைத்துசென்றால் என்ன? அவரசமாக படம் பார்க்க செல்லும் என் போன்ற கலை சேவகர்களுக்கு கூட வழிவிடாமல் கோச்சிங் க்ளாஸ் எடுப்பதில் அப்படி என்ன ஆர்வக்கோளாறு?
....................................................................................   

மரியான்:
பதிவுலகில் உணவு சார்ந்த பிரத்யேக கட்டுரைகளை எழுதும் ஆண்கள் மிகக்குறைவு. கேபிள் சங்கரின் 'சாப்பாட்டுக்கடை'பெரிய ஹிட்டானது. பசியோடு இருக்கும்போது அவரது பதிவுகளை படித்தால் நாக்கில் நீர் சுரக்கும். சாதாரண தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை சாப்பிட்ட அனுபவத்தை கூட பிரத்யேக நடையில் எழுதி வாசகர்களை கவரும் நேக்கு அறிந்தவர். உணவு குறித்து கோவை ஜீவாவும் நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரின் 'கடல் பயணங்கள்'வலைப்பூவில் உணவு சார்ந்து அவர் பகிர்ந்திருந்த பல இடுகைகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

முதலூர் முஸ்கோத் அல்வா, ஆற்காடு மக்கன் பேடா, ராமசேரி இட்லி என கணக்கிலடங்கா உணவுகள் பற்றி விரிவான விளக்கங்கள், நிறைய புகைப்படங்கள் என அசத்தி இருக்கிறார். வெறும் உணவைப்பற்றி மட்டுமே கூறாமல் அதற்கான தான் பயணித்த விதம் மற்றும் அவ்வூர்களை பற்றிய அனுபவங்களையும் சுரேஷ் கலந்து தந்திருப்பது நாமும் அவருடன் பயணித்த உணர்வை தருகிறது. அபாரமான உழைப்பு. சுரேஷ்குமாரின் வலைப்பூவை வாசிக்க:
 

...................................................................

சில்லுனு ஒரு சந்திப்பு:




கல்லூரி படிப்பு முடிந்த பிறகு சென்னையில் நடக்கும் மேடை நாடகங்களை காணும் ஆர்வம் ஏற்பட்டது. வெகுஜனங்களை போல எனக்கு தெரிந்த ஸ்டார்கள் என்றால் கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா போன்றவர்கள்தான். மீசை ஆனாலும் மனைவி, ஆ.உ.வா.அ. சிகாமணி போன்ற தமாஷ் நாடகங்கள் சிலவற்றை பார்த்து முடித்த பிறகு தற்செயலாக இடைவெளி ஏற்பட்டது. சென்ற ஆண்டு முதல் தீவிரமாக மேடை நாடகங்களை பார்க்க ஆரம்பித்தேன். பாரம்பரிய குழுக்கள், புதியவர்கள் என வித்யாசம் பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து நாடகங்களையும் காணும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. 

மேடை நாடக குழுக்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்து வெற்றிகரமாக வலம் வருவது டம்மிஸ் ட்ராமா. வெற்று நகைச்சுவை, தேவையற்ற சென்டிமென்ட், உபதேச மழை என அரைத்த மாவை அரைக்காமல் பெரும்பாலும் சிறந்த படைப்புகளை தந்து வரும் நாடகக்குழு. அதிதி, விநோதய சித்தம், பரிக்ஷை போன்ற எவர் கிரீன் ஹிட்களை தந்து நாடகம் காண்போரின் பேராதரவரை பெற்று வருகிறார்கள். டம்மிஸ் ட்ராமாக்கள் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாய் இருப்பது ஸ்ரீவத்சனின் சிறந்த எழுத்துக்கள். நடிகராயும் மேடையில் தோன்றி ரசிகர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர். ஸ்ரீவத்சன் அவர்கள் மீது மரியாதையும், அவரது எழுத்திற்கு ரசிகனாகவும் இருப்பதில் எனக்கு பெருமையுண்டு. சமீபத்தில் வாணி மஹாலில் விநோதய சித்தம் நாடகம் நடந்தேறிய பிறகு அவருடன் சிறிது நேரம் அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி.  
..........................................................................

நவீன சரஸ்வதி சபதம்: 
சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்காக நண்பர் கோவை ஆவி வெள்ளித்தாள் டு வெள்ளித்திரை எனும் போட்டியை அறிவித்து இருக்கிறார். இப்போட்டியில் வெற்றி பெறும் சிறுகதையை குறும்படமாக எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை அறிய:

 http://www.kovaiaavee.com/2014/10/blog-post_30.html 
................................................................................. 

தப்புத்தாளங்கள்:
தேர்தல் நேரத்தில் தங்கள் கட்சிக்கு ரஜினி வாய்ஸ் தர வேண்டும் எனும் விஷயத்தில் கோவிலில் உண்டைக்கட்டிக்கு அடித்துக்கொள்பவர்களை மிஞ்சி விடுவார்கள்நம் அரசியல்வாதிகள். முத்து,படையப்பா படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில விருதை அளித்து மெய் சிலிர்த்துக்கொண்டன கழக ஆட்சிகள். இதற்கு தாங்கள் எவ்விதத்திலும்  குறைந்தவர்கள் அல்ல என்பதைக்காட்ட அவருக்கு முதலில் பத்மஸ்ரீ தராமல் நேரடியாக பத்மபூஷன் தந்து குளிர்வித்தது வாஜ்பாய் அரசு. 

இப்போது ரஜினிக்கு Film Personality of the Year எனும் விருதை அறிவித்து அகமகிழ்கிறது மோடி அரசு.வாழ்நாள் சாதனையாளர் விருது தந்தால்கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அவர் என்ன சாதனை செய்தார் என்பது ரஜினிக்கு கூட புலப்பட வாய்ப்பில்லை. போகோ பார்க்கும் குழந்தைகள் கூட கோச்சடையானை நையாண்டி செய்ய வைத்து புண்ணியத்தை கட்டிக்கொண்டார் 'இயக்குனர்'சவுந்தர்யா. வலது பக்கம் இண்டிகேட்டர் போட்டு, இடதுபுறம் கைகாட்டி நேராக ஆட்டோவை ஓட்டிப்போவதில் ரஜினி ஒரு மாணிக் பாட்சா என்பது தெரிந்தும் அவரது சிக்னலுக்காக காத்திருக்கும் கட்சிகளை பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. 
.....................................................................

படிக்காதவன்:
சில மாதங்களுக்கு முன்பு வரை பல்வேறு வார பத்திரிக்கைகளை தொடர்ச்சியாக வாங்கி படித்து வந்தேன். இப்போது ரெகுலராய் வாங்குவது ஜூனியர் விகடனை மட்டுமே. அதுவும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை. உருப்படியான சரக்கில்லாமல் அரசியல் சார்புடன் வெட்டி நியாயம் பேசி மிளகாய் அரைக்கும் பத்திரிக்கைகளுக்கு கும்பிடு போட்டாகி விட்டது. எப்போதாவது ஒருமுறை 'இந்த வாரமாவது தேறுமா?'என்று ஏதேனும் ஒரு இதழை வாங்குவதோடு சரி. இந்தியா டுடே (தமிழ்) இதழில் வெளியாகும் கட்டுரைகளின் எழுத்துநடை பெரிதாய் மாறியபாடில்லை. இன்னும் ஹிந்திப்பட டப்பிங் பக்ட்டையே எழுத்தில் பின்பற்றி வருகிறார்கள். பேசாமல் முரசொலி, நமது எம்.ஜி.ஆர். ஆயுட்கால சந்தா வாங்கினால் என்னவென்று தோன்றுகிறது? உண்மை செய்திகளை அப்படியே உள்வாங்கி புத்தியை சாணை தீட்டிக்கொள்ளலாமே!!
......................................................................................  

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:
நீண்ட வருடங்களுக்கு பிறகு சென்னையில் பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் செப்டம்பர்/அக்டோபர் வந்தால் லேசாக ஒரு சாத்து சாத்திவிட்டு கிளம்பி விடும் வருண பகவான் இம்முறை அடிக்கடி விஜயம் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிதமான மழை, மென்குளிர் என நல்ல சீதோஷ்ண நிலை. அம்மா ஜாமீனில் வெளிவந்த நாளில் இவ்வாண்டிற்கான இரண்டாவது இன்னிங்ஸை சென்னையில் தொடங்கிய வருணர் இந்நாள் வரை 'சிலுத்துக்க'வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒப்பனை கலந்து பல்லை இளிக்கும் தெருக்கள், அடுத்து தொடரவுள்ள பேயடி வெயில் அனைத்தையும் மறந்துவிட்டு...லிவிங் த முமன்ட்!! 
..........................................................................................

 
பட்டைய கெளப்பணும் பாண்டியா: 

லவ் ஆந்தம், லாலிபாப் ஆந்தம் என்று இசையுலக சிகாமணிகள் வித விதமாய் நாதஸ் வாசித்து வரும் காலமிது. எத்தனை தலைமுறைகள் மாறினாலும் தலைவர் கவுண்டமணியின் காமடிக்கு வரவேற்பு நிச்சயம். யூத் சம்மந்தப்பட்ட புரட்சி என்றால் கவுண்டர் இல்லாமலா? தலைவருக்காக ஒரு ஸ்பெஷல் ஆந்தம் உருவாக்கி யூ ட்யூப்பில் உலவ விட்டிருக்கிறார் ஜிதேந்திரா என்கிற இளைஞர். ஒரு மாதத்திற்குள் 37,000 ஹிட்ஸ்களை அள்ளி இருக்கிறது. பின்னி பெடலெடுக்கும் அந்த காணொளியை காண:


.............................................................................................






மிஷ்கினின் காட்டமான பேச்சும், அதற்கான ஸ்பூஃபும்

$
0
0






வணக்கம் நண்பர்களே,
கடந்த ஞாயிறு அன்று திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்இயக்குனர் மிஷ்கின் பேசியபேச்சுதான் கோலிவுட்டின் தற்போதைய Hot talk. இணையத்தில் விமர்சிப்பவர்களைசகட்டு மேனிக்கு விளாசி இருந்தார் அவர். அந்த காணொளி:

https://www.youtube.com/watch?v=5dyvjaO1lQg 

காட்டமான இந்த பேச்சு குறித்து ஜில்மோர் தளத்தில் வெளியானகட்டுரை:

http://tamil.jillmore.com/mysskin-shows-his-anger-against-social-media-critics/ 

ஜில்மோர் யூட்யூப் சேனலில் மிஷ்கின் பேச்சை ஸ்பூஃப் செய்து ஒரு காணொளியைபகிர்ந்து இருக்கிறோம். மிஷ்கின் ரசிகன் ஃபேர் ஸ்கின்னாக நான் நடிக்க(!)கே.ஆர்.பி.செந்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதனைக்காண:



பிடித்திருந்தால் தங்கள் Facebook/Twitter தளங்களில் பகிரவும். நன்றி. 

 

காவியத்தலைவன்

$
0
0




சினிமாவின் தாயென்று சொல்லப்படும் மேடை நாடகத்தை தமிழக மக்கள் கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கும் இக்காலத்தில் அம்மூதாட்டியை கரம் பிடித்து அழைத்து வந்து சபையில் அமர வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் வசந்தபாலன். இப்படி ஒரு சப்ஜெக்டை தொடுவதற்கே ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் சபாவின் திரைக்கு பின்னே ஓடிப்போய் வசந்த பாலனிடம் கை குலுக்கி விட்டு இருக்கையில் வந்து அமர்ந்து கொள்ளலாம். அதற்கடுத்ததாக  நாடகம் எப்படி இருக்கிறது என்பதுதானே அதிமுக்கியமான விஷயம்? பார்க்கலாம் இனி.

மதுரை ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்த நாடக சபாவை நடத்தி வருபவர் சிவதாஸ் ஸ்வாமிகள். நெடுங்காலம் ராஜபார்ட் வேடம் போடும் நபர்  கருத்து மோதலால் அங்கிருந்து கிளம்பிவிட, அடுத்து அந்த பிரதான வேடத்திற்கு தகுதியானவர் யார் என யோசித்து காளியப்பனை தேர்வு செய்கிறார் சிவதாஸ். குருவினால் தொடர்ந்து தான் புறக்கணிப்படுவதை கண்டு விரக்தி அடையும் கோமதி நாயகம் இம்முறை உடைந்தே போகிறான். தம்பி போல பழகி வந்த காளியை இந்த ஒரு காரணத்திற்காக பழிவாங்கி, நாளடைவில் பிரபல ராஜபார்ட்டாக புகழை அடைகிறான் கோமதி. இதனிடையே காதலெனும் பேரலையும் இவர்களின் கால்களை பிடித்து இழுக்க கரை சேர்ந்தார்களா என்பதுதான் கதை.

நாடக்குழுவின் குருநாதராக நாசர். கொஞ்ச காலமாக நாசரின் பசிக்கு சோளப்பொறி மட்டுமே கிடைத்து வந்தது. இம்முறை வாக்காக ஒரு வாய்ப்பு கிட்டியதால் வாகை சூடியுள்ளார். சித்தார்த் எனும் இளவரசன் தலையில் ஒன்றரை டன் கிரீடம். கிரீடத்தை நழுவவிடாமல் ஆற்றை கடக்க என்ன பாடு படவேண்டி இருக்கிறது? 'டேய் ஒண்டிப்புலி.. இந்த ஆத்துல முதலை ஒண்ணு வலம் வருதாம்'என்று யாரேனும் தியேட்டரில் கத்தாத வரைக்கும்....'அப்பாடா'.  இவரது முந்தைய படங்களை வைத்து பார்க்கையில் இம்முறை சற்று மெருகேறி இருக்கிறது நடிப்பு.

சித்தார்த்தை விட பிரகாசித்து இருப்பது ப்ரித்விராஜ் தான். ஓரங்கட்டப்படும்போது ஏற்படும் வலியை விழிவழியே வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. வசனம் பேசும்போது ஆங்கங்கே மலையாள வாடை அடிப்பதால் உள்ளூர் ராஜபார்ட்டாக ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. நாடகம் முடிந்ததும் 'இன்னைக்கி நடிச்சேனா?'என இரண்டு மூன்று இடங்களில் சித்தார்த்தை கேட்கிறார் வேதிகா. 'அழகா இருக்க. ஆனா அப்படி என்ன நடிச்சி கிழிச்ச?'என்று நாம் பேச வேண்டிய வசனத்தை சித்தார்த்தே படத்தில் பேசி இருப்பது தொலைநோக்கு பார்வையின் உச்சம்.

கௌரவ நடிகராக வந்து கம்பீரமாக பெயரை தக்கவைத்துக்கொள்கிறார் பொன்வண்ணன். நாடக வருமானம் போய் விட்டதே எனும் கோபத்தில்  மன்சூர் அலிகான் குடித்து விட்டு கலாட்டா செய்வதாக ஒரு காட்சி வருகிறது.  கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் ப்ரித்விராஜிடம் 'உன்னை அடிச்சிருவேன். ஆனா என் கண்ணுக்கு நீ கிருஷ்ணனா தெரியறியே'என அவர் சொல்லுமிடம் அட்டகாசம். 'கோவப்படாதீங்க தம்பி'என்று ஒவ்வொருவரையும் விலக்கி விடுவதிலேயே தம்பி ராமையாவிற்கு நேரம் போய் விடுகிறது. சிங்கம்புலியின் 'அம்மா...அம்மா ஆயிடுவாங்க'வசனம் சிரிக்க வைக்கிறது.


 ரஹ்மானின் இசையில் 'வாங்க மக்கா வாங்க'துள்ளல். 'ஏய் மிஸ்டர் மைனரில்'மணிரத்னத்தின் 'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி'எட்டிப்பார்க்கிறது. இதர பாடல்கள் பெரிதாக மனதில் ரீங்காரமிடவில்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. சந்தானத்தின் கலை இயக்கம் பாராட்டுக்குரியது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகியவற்றில் நல்ல கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முக்கிய குறிப்பு: சித்தார்த் காதலியாக வரும் இளவரசியின் உதட்டில் மட்டும் சாயம் அதிகம்.

காவியத்தலைவன் மூலம் வசந்த பாலன் அடிப்படையில் சொல்ல வருவதென்ன? மறந்து போன நாடக உலகை மீண்டும் நம் கண்முன் வண்ணமயமாக நிறுத்துவது மட்டும்தானா? கர்ண மோட்சம், நாடக சபா, சங்கரதாஸ் சுவாமிகள், ராஜபார்ட் போன்ற பலகைகளும், உச்சரிப்புகளும் மட்டுமே காவியத்தலைவனை வெற்றி பெற வைக்க போதுமான அஸ்திரங்களா? சுதந்திர வேட்கைக்கும், கலை அர்ப்பணிப்பிற்கும் பெருந்தொண்டும், தியாகமும் செய்த தமிழ் நாடக கலைஞர்கள் பற்றிய ஒரு முக்கியமான பதிவை எடுக்கும்போது பிரதான பாத்திரங்களை தேர்வு செய்வது எத்தனை முக்கியமானது? சுமாரான நடிப்பும், செயற்கை பூச்சும் கொண்ட சித்தார்த், வேதிகாவை தேர்வு செய்து அவர்களிடம் நடிப்பை வாங்க இவ்வளவு மூச்சு வாங்க வேண்டுமா என்ன?

ப்ரிதிவிராஜ், சித்தார்த் இடையேயான உடன்பிறவா சகோதர பாசம், சித்தார்த் வேதிகா காதல் இரண்டிலும் போதுமான ஈர்ப்பே இல்லை. இளவரசியின் இல்லத்திற்கு ஏதோ கடலை பர்பி வாங்க போவது போல சர்வ சாதாரணமாக சென்று செல்வது, முதுகில் தோட்டா துளைத்த பிறகும் நெடிய வசனம் பேசுவது என சித்தார்த்தின் கதாபாத்திரம் சித்திர குள்ளனாய் மாறுவது நகைச்சுவை.

க்ளைமாக்ஸ் விறுவிறுப்பாக இருக்க வேண்டுமெனும் குல வழக்கத்தின்படி 'ராஜபார்ட் ரங்கதுரை'போல சுதேசி ஃபார்முலா இறக்கப்பட்டு உள்ளது. வந்தே மாதரம் என்று சித்தார்த் நம்மை பார்த்து முழங்கும்போது 'சொல்லுங்களடா வெற்றி வேல் வீர வேல் என்று'என சிப்பாய்களிடம் இம்சை அரசன் கெஞ்சும் காட்சி கண்முன் வந்து செல்கிறது. எழுத்துலக ஆளுமைகள் வசனம் எழுதும் தமிழ்ப்படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாமலே இருப்பதன் 'ரகசியம்'என்னவென்று தெரியவில்லை. ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கும் இந்த காவியத்தலைவனிலும் அந்த ரகசியம் தெரிய வாய்ப்பே இல்லை.

'வாங்க மக்கா வாங்க. எங்க நாடகம் பாக்க வாங்க'என ட்ரைலரில் தெளிவாக சொன்ன பிறகும் 'சினிமாவை'எதிர்பார்த்து வருவது அபத்தம். ஆனால் நாடகத்தை கூட காட்டாமல் நாடக ஒத்திகையை மட்டும் இயக்குனர் காட்டியிருப்பது சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கே பொறுக்காது மக்கா.

Written for tamil.jillmore.com

.....................................................................



லிங்கா

$
0
0


வணக்கம் நண்பர்களே,

ரஜினிகாந்த், அனுஷ்கா,  சந்தானம் நடித்த லிங்கா படத்தின் எனது விமர்சனம் படிக்க:  

http://tamil.jillmore.com/lingaa-movie-review/




.....................................................................................



ஸ்பெஷல் மீல்ஸ் (16/12/14)

$
0
0


மௌனகுரு:



இரண்டு சிறப்பான உணவுக்கடைகளில் சாப்பிடும் சந்தர்ப்பம் சமீபத்தில் அமைந்தது. 'கடல் பயணங்கள்'சுரேஷ் சென்னை வந்திருந்தார். கோவை ஆவி, கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ் ஆகியோருடன் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருக்கும் பிரபல 'சீனா பாய் இட்லிக்கடை'க்கு விஜயம் செய்தேன். பத்து மினி நெய் இட்லிகள் மற்றும் இரண்டு ஊத்தாப்பங்கள். இந்த இரண்டு ஐட்டங்களை மட்டும் வைத்தே ஜரூராக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலை ரூ 40. இட்லிக்கு சட்னி, சாம்பார் தேவையே இல்லை. பிரமாதமான சுவை கொண்ட இட்லிப்பொடியில் குளித்தவாறு சுடச்சுட வரும் இட்லிக்களை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கலாம். அந்த இட்லிப்பொடியில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. ஊத்தாப்பமும் ஆசம். 

இக்கடை குறித்து விரிவான தகவல்களை 'கடல் பயணங்கள்'சுரேஷ் எழுதி இருக்கிறார்

 http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_15.html
 

அடுத்ததாக கீழ்பாக்கம் ஓர்ம்ஸ் சாலை எண் 4/2 வில் இருக்கும் மௌனகுரு கண்ணப்பா உணவகத்தை பரிந்துரை செய்து அழைத்துச்சென்றார் கேபிள் சங்கர். பூரி சைஸில் இருக்கும் தட்டு இட்லி அங்கே ஸ்பெஷலாம். அத்துடன் பேபிகார்ன், மைசூர் மற்றும் பன்னீர் தோசைகளையும் ஆர்டர் செய்து உள்ளே தள்ளினோம். ஆப்ரிக்கன், மெக்சிகன், இத்தாலி மற்றும் ஜெயின் சமூக மக்கள் விரும்பும் தோசைகள் பல வெரைட்டிகளில் கிடைக்கின்றன. ஆனாலும் அங்கே தட்டு  இட்லிதான் ஹீரோ. கேபிள், கே.ஆர்.பி. மற்றும் நான் சாப்பிட்டது மொத்தம் நான்கு தட்டு இட்லிகள் மற்றும் மூன்று தோசைகள். பில் வெறும் 300 ரூபாய்தான்!!

இக்கடை குறித்து விரிவான தகவல்களைகேபிள் சங்கர் எழுதி இருக்கிறார்:
 
http://www.cablesankaronline.com/2014/12/blog-post.html


.................................................................................

சும்மா நச்னு இருக்கு:

தேசத்தின் முன்னேற்றத்திற்கு சம்மந்தம் இல்லாத கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு மொழித்திணிப்பு, மத துவேஷம் போன்ற அதி அத்யாவசிய செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் பா.ஜ.க. தலைவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அங்கே அமளி துமளி என்றால் இங்கே அநியாய அமைதி. நிஜத்தில் சொல்லப்போனால் பக்கோடா சாப்பிடும் பன்னீர் ஆட்சியில்தான் மாநிலம் அமைதிப்பூங்காவாய் திகழ்கிறது. கவட்டைக்கு கீழே பொக்ரான் குண்டை பற்ற வைத்தால் கூட சிலையாய் இருக்கும் கலையில் 100/100 வாங்கிய நபராகவே தெரிகிறார். வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் அசையாமல் இருக்கும் அண்ணாத்தையை கூட ஒரு நொடி கண்சிமிட்ட வைத்து விடலாம் போல. அருமையான தேசம், அற்புதமான மாநிலம்.

.................................................................................. 


பட்டியல்:

ஓரளவுபெயர் சொல்லும் படங்களை தந்து வந்த ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகங்கள்இவ்வருடம் பெருமளவு ஏமாற்றி விட்டன. தெலுங்கில் 'நா பங்காரு தல்லி'ரசிக்கவைத்தது. சிறந்த படங்களை தந்து இவ்வருடம் முதலிடத்தை பிடித்து இருப்பதுமலையாள சினிமாதான். இவ்வாண்டின் திரைப்படங்கள் குறித்த எனது பார்வையைtamil.jillmore.comதளத்தில் விரைவில் எழுதுகிறேன். எனக்குப்பிடித்தபடங்கள்/கலைஞர்கள் பட்டியல் மெட்ராஸ் பவனில்வழக்கம்போலவெளியாகும். 

............................................................................... 


மூடர் கூடம்:

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்வரும்போதெல்லாம் உடனே மாறாமல்சற்று தாமதமாகவே அதனுடன் இணைந்து கொள்வேன். அலுவலகத்தில் அனைவரும் மொபைல் வாங்கியபிறகு கூட பொறுமை காத்து அதன் அவசியம் தேவைப்பட்டபோதே வாங்கினேன். டி.வி.கணினி போன்ற பொருட்கள் புதுவடிவத்திற்கு மாறினாலும் அதே நிலைப்பாட்டைத்தான்எடுத்தேன். அதுபோல ஃபேஸ்புக்கில் பரவலாக நண்பர்கள் உள்ளே நுழைந்து போதும்நிதானமாகவே அடியெடுத்து வைத்தேன்.


நல்ல நட்புகளை வைத்திருக்கும் நண்பர்கள் தடாலடியாக சில வார்த்தைகளை பிரயோகித்து அதன் நீட்சியாக அடித்துக்கொள்வதும், அதுவே மனக்கசப்பாக மாறி பிரிவதும் எளிதாக நடந்து வருகிறது. சில நொடியில் எழுதும் வார்த்தைகள் நிரந்தர பகைக்கு வழி வகுத்து விடுகின்றன. நட்புகளை வலுவாக்க உருவாக்கப்பட்டஃபேஸ்புக் அனைத்து மனக்குமுறல்கள் மற்றும் வஞ்சங்களுக்கான ஒரே வடிகாலாய் ஆகி இருப்பது காலத்தின் கோலம். 



பிரச்னைகளை எழுப்பும் ஸ்டேட்டஸ்கள்/கமண்ட்கள் அருமையான நட்புகளைஇழக்க வைக்கும் ஆபத்தை கொண்டிருப்பதால் 'கவனம்'அவசியம்.   

............................................................................ 


தாலாட்டு கேக்குதம்மா: 

டிசம்பர் மாதமென்பதால் சென்னையில் இசை விழாக்கள் ஏகத்துக்கும் களை கட்டி வருகின்றன.அனைத்து சபாக்களிலும் சங்கீத கச்சேரிகள் ஆக்ரமித்து இருப்பதால்மேடை நாடக பிரியனான எனக்கு இம்மாதம் ஒரு சில நாடகங்களை மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. சங்கீத ஞானம் கருவேப்பிலை அளவு கூட இல்லை. ஆனால் கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோனில் மட்டும் ஏனோ ஒரு ஈர்ப்பு. சென்ற முறை அவரது அற்புதமான இசையை நேரில் கண்டு/கேட்டுலயித்தேன். இம்முறை டிக்கட் விலை வாயை பிளக்க வைப்பதால் அன்பளிப்பு/சொற்ப விலை டிக்கட் வாங்க திட்டம் தீட்ட வேண்டும். 


'சென்னையில் திருவையாறு'இசை  நிகழ்ச்சி குறித்து எங்கள் தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியை படிக்க: http://tamil.jillmore.com/chennaiyil-thiruvaiyaru-musical-programme-to-begin-on-18th-december/


..........................................................................

பாட்டாளி:
தமிழில் உருப்படியான நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. காலப்போக்கில் வணிக சமரசத்திற்கு ஆட்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதையும் தாண்டி மண்ணின் பெருமையை காத்து வருவது பாராட்டத்தக்கது. எதேச்சையாக ஞாயிறு காலை 10.30 மணிக்கு 'சின்ன சின்ன ஆசை'எனும் நிகழ்ச்சியை பார்த்தேன். முன்பொரு சமயம் இந்நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்தாலும் இம்முறை ஒளிபரப்பிய விஷயம் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது.

திரிசூலம் மலையருகே இரண்டு தண்ணீர் பேரல்களை மாட்டு வண்டியில் ஏற்றி அப்பகுதியில் இருக்கும் சிற்றுண்டி கடைகளுக்கு சப்ளை செய்து வரும் பெரியவர் பற்றிய பிரத்யேக நிகழ்ச்சி. 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 'நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலாததால் வேறு தொழிலுக்கு செல்ல முடியவில்லை. பிள்ளைகளுக்கு திருமணம்  செய்து வைத்துவிட்டேன். வருடா வருடம் வேறு மாடு வாங்க வேண்டி இருக்கிறது. எனக்கும், மாட்டிற்கும் நித்தம் 150 ரூபாய் செலவாகிறது. மோட்டார் வாகனங்களில் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால் இன்னும் எத்தனை காலம் தாக்கு பிடிப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு நிலை வந்தால் ஊர்ப்பக்கம் சென்று விட வேண்டியதுதான். பயணத்தின் இடையே களைப்பாற சற்று ஓய்வெடுக்கும் சமயத்தில் டயர், பேரல் போன்றவற்றை சிலர் திருடி விடுகிறார்கள்'என கவலை பொங்க கூறினாலும் உழைப்பாளிக்கான பெருமிதம் அவரிடம் ஸ்திரமாக குடிகொண்டிருந்தது.

'உங்கள் ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி தருகிறோம்'என தொகுப்பாளர் கூற '250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களை விட 500 லிட்டரில் ஒரே பேரலாக இருந்தால் வேலை சுலபமாக நடக்கும்'எனக்கூறினார் பெரியவர். சில கடைகளை தாண்டி ஒருவழியாக அவர் எதிர்பார்த்த பேரல் கிடைத்துவிட்டது. 1,857 ரூபாய் மதிப்புள்ள அப்பொருளுக்கான பணத்தை பெரியவரிடம் தந்து கடைக்காரரிடம் தரச்சொன்ன தொகுப்பாளரை தோள்தட்டி பாராட்டலாம்.  
........................................................................

சவாலே சமாளி:
இந்த வருடம் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களும் வசூலில் மண்ணை கவ்வி விட்டன. இதற்கு ஒரே காரணம் முன்பைப்போல பொழுதுபோக்கு படைப்பை தர முடியாமல் கற்பனை வறட்சியில் கோடம்பாக்கம் தள்ளாடியதுதான். 2015 ஆம் வருடம் இன்னும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக இவ்வருடம் வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கும் படங்களுக்கு. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் உலகக்கோப்பை க்ரிக்கட், பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், அதன் பிறகு ஐ.பி.எல் என பல்வேறு நிகழ்வுகள் காத்திருகின்றன. எனவே கடும் போராட்டத்திற்கு இடையேதான் தமிழ்ப்படங்கள் வெற்றிக்கனியை பறிக்க இயலும்.  தலைவர் கவுண்டமணியின் '49 ஓ'மட்டுமே நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். 
................................................................................ 



புருஷ லட்சணம்: 
For Hire - சமீபத்தில் ரசித்த குறும்படம். இரவுப்பின்னணியில் சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார்  இயக்குனர் விஷ்ணு ராகவ்: 
 


..........................................................................................



  

மீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை

திரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்

$
0
0





2014 ஆம் ஆண்டில் எனக்கு பிடித்த தமிழ்த்திரை படைப்புகள், கலைஞர்களை இப்பதிவின் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பெரிய ஸ்டார்கள்/இயக்குனர்கள் படங்கள் எதுவும் பெரிதாய் கவரவில்லை. கூடைப்பந்தாட்டத்தை மையமாகக்கொண்டு வெளிவந்த வல்லினம், தமிழகத்தில் நடந்த மோசடிகளை சுவாரஸ்யமாய் தொகுத்த சதுரங்க வேட்டை, விறுவிறு கமர்சியலாய் இருந்த கோலி சோடா உள்ளிட்டவை ரசிக்க வைத்தன. 

சாதி/மத பிரச்னைகள், கார்ப்பரேட் கம்பனிகளின் அராஜகம் போன்ற முக்கியமான பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு படங்கள் வந்தாலும் அவைகள் எல்லாம் மசாலா பிடிக்குள் சிக்கியதால் 'க்ளாஸ்'வரிசையில் சேராமல் போயின. இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்களில் படையெடுத்தாலும் மிகச்சிலருக்கே வெற்றி கிட்டியது. பேசப்பட்ட இயக்குனர்கள் கூட தடுமாற்றத்தை சந்தித்தனர். 2015 ஆம் ஆண்டில் வணிக ரீதியான வெற்றிப்படங்கள் அதிகம் வந்தால் மட்டுமே தமிழ் திரையுலகம் தப்பிக்க விட முடியும். 'சமூகத்துக்கு நல்லது சொன்னா போதும்'என்பதோடு திருப்தி ஆகிவிட்டால் போதாது. சிறந்த படங்கள் வசூலையும் சேர்த்து அள்ளினால்தான் முழுமையான வெற்றியை அனுபவிக்க முடியுமென்பது பலரும் அறிந்ததுதான். இனி 2014 இல் எனக்கு பிடித்த படைப்புகள்/கலைஞர்கள் பட்டியல்:

சண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர் - கோலி சோடா

    
ஓரளவுக்கேனும் லைவ்வான சண்டைகளை அமைப்பது என்பதே இந்திய சினிமாவில் அருகி வரும் நேரமிது. கயிறு மற்றும் கணினியின் துணையுடன் மட்டுமே நாயகன், வில்லன், அடியாட்கள் அனைவரும் பறந்து வருகிறார்கள். ரத்தம் தெறிக்கும் வன்முறைப்படங்கள் முன்புபோல இவ்வருடம் பெரியளவில் வரவில்லை. வன்மம், மெட்ராஸ், மீகாமன், ஜிகர்தண்டா போன்ற சில படங்களில் மட்டுமே 'மனசாட்சியுடன்'ஆக்சன் காட்சிகள் அமைக்கப்பட்டன.

மாஸ் கோலாக்களுக்கு இடையே பீறிட்டு வந்தது சுப்ரீம் சுந்தரின் கோலி சோடா ஆக்சன் ப்ளாக். மார்க்கெட்டில் நான்கு பசங்களும் ஆக்ரோசமாக போட்ட சண்டைதான் இவ்வருடத்தின் தாறுமாறு தகராறு. ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருந்தாலும் சரியான வெளிச்சம் கிடைக்காத வருத்தத்தை காலி செய்து சுந்தரை 'சுப்ரீம்'மாஸ்டர் ஆக்கியது  கோலி சோடா.
 
ஒளிப்பதிவு: கேவி ஆரி - ஜிகர்தண்டா


இவ்வருடம் ஏகப்பட்ட பேர் தங்கள் சிறந்த ஒளிப்பதிவு மூலம் தமிழ் திரையில் ஆளுமை செய்தார்கள். தினேஷ் கிருஷ்ணன் (தெகிடி), ராஜவேல் ஒளிவீரன் (நெடுஞ்சாலை), மனோஜ் பரமஹம்சா (பூவரசம் பீப்பீ), வெங்கடேஷ் (சதுரங்க வேட்டை), சங்கர் (முண்டாசுப்பட்டி), சன்னி ஜோசப் (ராமானுஜன்), , முரளி (மெட்ராஸ்), நீரவ் ஷா (காவியத்தலைவன்), ரவி ராய் (பிசாசு), சதீஷ் (மீகாமன்) என பட்டியல் நீள்கிறது. 

இதுதான் மதுரை என்று பலர் பயாஸ்கோப் காட்டி வந்தபோது இன்னொரு மதுரையை கண்டுபிடித்தார் கேமரா கொலம்பஸ் கேவி ஆரி. பகலையும், இரவையும் தனது கட்டளைக்கு ஆட்டுவித்து அப்ளாஸ் வாங்கிய ஒளி ஓவியர்.
  
பாடகி: உத்ரா - 'போகும் பாதை' (பிசாசு).


கண்ணுக்குள் பொத்தி (திருமணம் எனும் நிக்காஹ்), கோடையில (குக்கூ), நாராயண (ராமானுஜன்), அம்மா அம்மா (வேலையில்லா பட்டதாரி), புத்தம் புது காலை (மேகா), உச்சிமல (காடு), என் ஆள (கயல்) ஆகிய பாடல்கள் மூலம் முறையே சாருலதா மணி, வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.ஜானகி, ஆனந்தி, மகிழினி, ஷ்ரேயா கோஷல் போன்றவர்கள் அசத்தினார்கள்.   

அனைவரின் பின்னணி குரலையும் விட உத்ராவின் 'போகும் பாதை'பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழச்சி தங்கபாண்டியனின் பாடல் வரிகள், அர்ரோலினின் வயலின் ஒலி, உத்ராவின் குரல் வளம், மிஷ்கினின் காட்சியமைப்பு என அனைத்தும் கச்சிதமாய் இணைந்து நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத பாடலை தந்தன. உன்னி கிருஷ்ணன் மகள் என்பதால் உத்ராவின் சாரீரம் வெகு சிறப்பாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லைதான்.

பாடகர்: ஹரிஹரன் - 'போடா போ' (ஆள்) 



ஒனக்காக (பலராம் - பண்ணையாரும் பத்மினியும்), இந்த பொறப்புதான் (கைலாஷ் கேர் - உன் சமையல் அறையில்), விண்மீன் (அபே - தெகிடி),  கண்ணம்மா,  பாண்டி நாட்டு (அந்தோணி தாசன் - ஜிகர்தண்டா) போன்ற பாடல்கள் அதிகமாய் பிடித்திருந்தது. நம்ம கிராமம் படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய 'இயற்கை அன்னையின்'பாடல் இன்னும் சிறப்பு. ஆனால் இதையும் தாண்டி மனதை கொள்ளையடித்த பாடல் ஹரிஹரன் பாடிய 'போடா போ' (ஆள்). தன்னம்பிக்கை தரும் வரிகளை கொண்ட இப்பாடல் ஹரிஹரன் மகுடத்தில் இன்னொரு வைரக்கல். இடையூறு செய்யாத ஜோஹனின் இசையும் சிறப்பு.

பாடலாசிரியர்: யுகபாரதி - குக்கூ, காடு, கயல்.

   
ஒனக்காக பொறந்தேனே (பண்ணையாரும் பத்மினியும்) பாடலில் அமரர் வாலி, 'போகும் பாதை'யில் (பிசாசு) தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தாமரை, கார்க்கி, கானா பாலா என ஆளுக்கொரு விதத்தில் அருமையான பாடல்களை இயற்றி இருந்தார்கள். எனினும் கபிலன் (தெகிடி, மெட்ராஸ்) மற்றும் யுகபாரதியின் எழுத்துக்கள்தான் என்னை அதிகம் ஈர்த்தன. ஆகாசத்த, கோடையில (குக்கூ), உச்சிமல, ஊரோரம் (காடு), டார்லிங் டம்பக்கு (மான் கராத்தே) மற்றும் கயல் பாடல்கள் அற்புதம். 

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் - மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா


பின்னணி மற்றும் பாடலுக்கான இசையமைப்பு என இரண்டிலும் முன்னே நின்றது சந்தோஷ் நாராயணன்தான். மெட்ராஸ், குக்கூ, ஜிகர்தண்டா என சந்தோஷின் 2014 இசைப்பயணம் அட்டகாசம். ராஜா, ரஹ்மானுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் தனியிடம் பெறும் தகுதி நிறைந்தவராக இருக்கிறார். இவ்வாண்டின் இன்னொரு நம்பிக்கை தரும் வரவு இசையமைப்பாளர் சான் ரோல்டன். 

நகைச்சுவை நடிகர்:ராமதாஸ் - முண்டாசுப்பட்டி


போதுமான வாய்ப்புகள் கிடைத்தும் சூரி பிரகாசிக்கவில்லை. பௌலராக சுசீந்திரனின் ஜீவா படத்தில் மட்டும் ஸ்கோர் செய்தார். சதீஷ், பாலசரவணன் ஆகியோரும் சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர். கோலி சோடாவில் இமான் அண்ணாச்சி காவல் நிலையத்தினுள் செய்த அலப்பறை சிரிக்க வைத்தது. வி.ஐ.பி.யில் குறைவாக பேசி நிறைவாய் மகிழ வைத்தார் விவேக். கப்பலில் காமடிக்கு உத்திரவாதம் தந்தார் விடிவி கணேஷ். அரண்மனையில் சந்தானத்தின் காமடியால் அரங்கம் அதிர்ந்தது. நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தில் எதிர்பார்த்த அளவு கலகலப்பில்லை.

பெல்பாட்டம் காலத்தில் ஹீரோ வாய்ப்பு தேடி அலையும் முனீஷ்காந்த் வேடத்தில் பட்டையை கிளப்பினார் ராமதாஸ். முண்டாசுப்பட்டியில் வட்டார வழக்கு, 'நடிச்சா ஹீரோ சார்'தோரணை, க்ளைமாக்ஸ் கலாட்டா மூலம் நகைச்சுவை நாயகனாய் வெற்றிக்கொடி கட்டினார் இவர்.

..........................................................................

தொடர்ச்சியை படிக்க:

திரைவிரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் இரண்டு





திரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2

$
0
0




காட்சி (வசனமின்றி): அமர காவியம்




காதல் கைகூடுமா ஆகாதா எனும் மன உளைச்சலுடன் காத்திருந்து வெறுத்துப்போய் மியா ஜார்ஜை சத்யா குத்தி சாய்க்கும் காட்சி. அமரகாவியமாக வந்திருக்க வேண்டிய படைப்பு. மெதுவான காட்சிகள் அதிகம் இருந்ததால் அமர விடா காவியமாய் போனது துரதிர்ஷ்டம்.

காட்சி (வசனத்துடன்):  காவியத்தலைவன்


தனது நாடகக்குழுவில் ராஜபார்ட்டை தேர்வு செய்ய பிருத்விராஜ் மற்றும் சித்தார்த்திற்கு பரீட்சை வைக்கிறார் நாசர். சூரபத்மனைப்போல ஆக்ரோசம் பொங்க பிருத்விராஜ் கர்ஜித்து முடித்த பிறகு மெதட் ஆக்டிங் பாணியில் சூரபத்மனை வெளிக்கொண்டு வந்து சித்தார்த் பேசும் காட்சி எனது பேவரிட். 


துணை நடிகை: சுகுமாரி - நம்ம கிராமம்




பாரதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கணவனை இழந்த பெண்களின் சுதந்திரம் எப்படி இரண்டாம் கட்டிற்குள் கட்டுண்டு கிடந்தது என்பதை சொன்ன படம் நம்ம கிராமம். தனக்கு நேர்ந்த கொடுமை தன் வீட்டுப்பெண் துளசிக்கும் நேரக்கூடாது எனப்போராடும் அம்மிணி அம்மாளாக வாழ்ந்திருந்தார் சுகுமாரி. கடைசி கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவு அதிர்வு. கதாபாத்திரத்திற்காக அசலில் தலைமுடியை துறந்து அர்ப்பணிப்பை காட்டினார். உலகை விட்டு போய்விட்டாலும் சிறந்த நடிகை எனும் முத்திரையை மீண்டும் பதித்துவிட்டு சென்றவர். மற்ற துணை நடிகைகளில் ரித்விகாவின் (மெட்ராஸ்) நடிப்பு இயல்பாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

துணை நடிகர்: கலையரசன் - மெட்ராஸ்


மெட்ராஸ் போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தாமல் போனதாலும், கார்த்தியை விட குறைவான காட்சிகளில் நடித்த காரணத்தினாலும் மட்டுமே இவரை துணை நடிகர் என்று நம்ப வேண்டியதாய் போனது. மற்றபடி அப்படத்தின் அசல் நாயகன் கார்த்திக் அல்ல. கலையரசன்தான். அதனை மேலே இருக்கும் போட்டோவும் நிரூபிக்கிறது. மதயானைக்கூட்டம் மூலம் கவனிப்பை பெற்றவர் 'மெட்ராஸ்'சுவர் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தார். 

'கலையரசனுக்கு போட்டி இவர்தானோ?'எனும் பிரமையை உண்டாக்கியவர் சித்தார்த். ஜிகர்தண்டா, காவியத்தலைவன் போன்ற படங்களில் ஹீரோவா, துணை நடிகரா என்று புரியாத அளவிற்கு தம் கட்டி நடித்து ஓரளவு இருப்பை தக்க வைத்துக்கொண்டார். 'ஜீவா'படத்தில் ரஞ்சி போட்டியில் தேர்வாகாத விரக்தியில் இருக்கும் க்ரிக்கெட் வீரனாக லக்ஷ்மணன் நன்றாய் நடித்திருந்தார். கலையரசனுக்கு அடுத்தபடியாக வந்த ரன்னர் அப் பெர்பாமன்ஸ் இவருடையது.

நடிகை: மாளவிகா நாயர் - குக்கூ  



லட்சுமி மேனன், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிட்ட அளவு படங்களில் வந்து சென்றனர். கண்களில் நீர் தேக்குவதைத்தாண்டி இன்னும் அழுத்தமாய் நடித்திருந்தால் 'கயல்'ஆனந்தி பிடித்த நடிகையாய் இருந்திருப்பார். கண்பார்வையற்ற நபராக ஆகச்சிறந்த நடிப்பை மாளவிகா தரவில்லை  என்பது உண்மைதான். எனினும் இப்படி ஒரு சவாலான கேரக்டரை ஏற்று நடித்ததும், இவருக்கு போட்டியாக அருகில் எவரும் இல்லாததும் ப்ளஸ் ஆகி இருக்கிறது. 

நடிகர் & வில்லன்: சிம்ஹா - ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா.


வில்லன்: சின்ன பயல்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய மதுசூதன ராவ் (கோலி சோடா), செந்தமிழ் பேசி அட்டகாசம் செய்த வளவன் (சதுரங்க வேட்டை), கொஞ்சமே பேசி அதிகமாய் பேசவைத்த அஷுதோஷ் ராணா (மீகாமன்) என இவ்வருடம் கையளவு வில்லன்களே மனதில் நின்றனர். மற்ற கார்ப்பரேட்/மும்பை வில்லன்கள் எல்லாம் சிரிக்க மட்டுமே வைத்தனர். 

அசால்ட் சேது எனும் கனமான கேரக்டரை தாங்க முடியாமல் சில இடங்களில் சிம்ஹா தடுமாறி இருந்ததாக தெரிகிறது. அதையும் மீறி இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த வில்லன் சிம்ஹா. 

நடிகர்: கமலும், விக்ரமும் இவ்வருடம் விடுப்பில் போய் விட்டார்கள். வி.ஐ.பி.யில் தனுஷின் நடிப்பு வழக்கம்போல் கவனிக்க வைத்தது. குக்கூ, திருடன் போலீஸ் மூலம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் அக்கறையை காட்டி இருந்தார் தினேஷ். ஆனாலும் இன்னும் நடித்திருக்கலாமோ எனத்தோன்றியது.

ஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாகவும், ஆடாம ஜெயிச்சோமடாவில் 'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்'போலீஸாகவும் பிரமாதமாய் நடித்ததால் இவ்வாண்டின் சிறந்த நடிகராய் எனக்கு பட்டவர் சிம்ஹாதான். 

இயக்குனர்: ஞானராஜசேகரன் - ராமானுஜன்
 
  
மோகன் சர்மா (நம்ம கிராமம்), விஜய் மில்டன் (கோலி சோடா), மகிழ் திருமேனி (மீகாமன்), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா), பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), ரஞ்சித் (மெட்ராஸ்), மிஷ்கின் (பிசாசு) என என்னை கவர்ந்த மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படைப்பாளிகள் இவ்வருடம் முத்திரையை பதித்தார்கள்.  

இவர்களைத்தாண்டி 2014 ஆம் வருடத்தில் எனக்கு அதிகம் பிடித்த இயக்குனராய் இருந்தது ஞானராஜசேகரன். கிட்டத்தட்ட அனைவரும் மறந்து போன கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை திரையில் பிரதிபலித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு மீண்டும் கடுமையான ஆராய்ச்சி, சோர்வடையா தேடல்கள் உள்ளிட்ட சிரமங்களை தாங்கி இந்த முக்கியமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும். அடுத்ததாய் எந்த படைப்பை எடுக்கப்போகிறார் எனும் ஆவல் அதிகரித்துள்ளது. 


திரைப்படம்: நம்ம கிராமம், ராமானுஜன் 



பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள்/படங்களை பட்டியலில் சேர்க்க விரும்புவதில்லை நான். அதையும் மீறி நம்ம கிராமமும், ராமானுஜனும்  பிடித்த படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கின்றன. 

1930 களின் இறுதியில் இருந்து சுதந்திரம் பெறும் சமயம் வரை பாலக்காட்டு பிராமண சமூகத்தில் நடந்த பெண்ணுரிமை மறுப்பு பற்றி பேசியது நம்ம கிராமம். கூர்மையான வசனங்கள் மற்றும் சம்வ்ருதா, சுகுமாரி, ரேணுகா போன்றோரின் இயல்பான நடிப்பு ஆகியவற்றின் மூலம் நல்லதோர் படைப்பை தந்தார் மோகன் சர்மா. தானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிய மற்றும் கேரள அரசின் விருதுகளை வென்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகிய இப்படம் தமிழில் ஜனவரி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மொத்தம் மூன்று பாகங்களை கொண்டிருக்கும் கதை. அடுத்த பாகத்தை காண காத்திருக்கிறேன்.


முன்பு சொன்னதுபோல தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு ராமானுஜன். கணிதமேதை ராமானுஜன் பற்றிய முக்கிய குறிப்புகளை எடுக்க இயக்குனர் ஞானராஜசேகரனுக்கு முழுதாய் ஓராண்டு தேவைப்பட்டது .ராமானுஜத்தின் துணைவியாரும் இறந்துவிட அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றின் துணையுடன் ஆய்வை துவக்கினார். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்தவும் பல சோதனைகள். இறுதியில் ராமானுஜன் உயிர்த்தெழுந்து நீக்கமற நினைவில் நின்றார்.
 
வசனகர்த்தா & FIND OF THE YEAR : வினோத் - சதுரங்க வேட்டை


வசனகர்த்தா: 'ராஜாவோட வேலை...வேலை செய்யறது இல்ல. வேலை சொல்றது', 'உனக்கு மட்டும் புரிஞ்சிடுச்சின்னா நான் வேற ஐடியா யோசிக்கணும்'என யதார்த்தம் கலந்த நையாண்டி வசனங்கள் மூலம் பட்டையை கிளப்பினார் வினோத். பெரும்புள்ளி ஒருவரை வலையில் வீழ்த்த நட்ராஜ் செய்யும் ரைஸ் புல்லிங் மோசடி வசனங்கள் அமர்க்களம். இப்படி படம் நெடுக நேர்த்தியான வசனங்களை அமைத்திருந்தார். பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் ரஞ்சித்தின் மெட்ராஸ் ஆகியவற்றை விட சில அடிகள் முன்னே நின்றது வினோத்தின் பேனா வீச்சு.

FIND OF THE YEAR: நடிப்பு, தொழில்நுட்பம், பாடல்கள், இயக்கம் என வெவ்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இவ்வருடம் தங்களுக்கான அடையாளத்தை பதித்தனர். சைவம், பிசாசு படங்களுக்கு பின்னணி பாடிய உத்ரா, அறிமுக பாடலிலேயே உச்சம் தொட்ட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், முதல் படமான வல்லினத்தில் தேசிய விருது பெற்ற எடிட்டர் பாஸ்கர்  போன்றோர் முக்கியமானவர்கள். 

உப்மா கமர்சியல்கள் எடுப்பதை ஒதுக்கிவிட்டு உருப்படியான படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் தீவிரம் காட்டி வருவது திரைத்துறைக்கு ஆரோக்யம் தரும் விஷயம். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என உதாரணங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் வினோத்தும் சேர்ந்து இருக்கிறார்.

பித்தலாட்டங்களை செய்யும் நாயகனை முன்னிறுத்தும் ஜனரஞ்சக படம் என்பதோடு நிறுத்தி விடாமல் யதார்த்தமான கருத்துக்கள், நல்ல தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களையும் கலந்திருந்தார் இயக்குனர். சதுரங்க வேட்டை மூலம் ராஜாவாகி இருக்கும் வினோத் வரும் ஆண்டுகளிலும் பட்டத்தை தக்க வைப்பார் என நம்பலாம். 

............................................................................


முந்தைய பதிவு:


     


 

ஃபேஸ்புக்கில் நான்

$
0
0


மெட்ராஸ் பவன் தளத்தை வாசித்து ஆதரவு தந்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 
மெட்ராஸ் பவன் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருவதற்கு முக்கிய மற்றும் ஒரே காரணம் நீங்கள்தான். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் பல்வறு அயல் தேசங்களில் இருந்து இத்தளத்தை வாசித்து ஊக்கம் அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றி. இவ்வருடமும் என்னால் ஆன நல்ல பதிவுகளை எழுதுவேன்.

ஃபேஸ்புக்கில் என்னை தொடர... 



மின்னஞ்சல் முகவரி: madrasminnal@gmail.com



அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

.......................................................................................




$
0
0





விக்ரம் - வசூலில் அடாது சோதனைகள் வந்தாலும் விடாது போராடும் கலைஞன். பீமா, ராவணன், கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம் போன்றவற்றில் முன்னணி இயக்குனர்கள் இருந்தும் காரியம் ஆகவில்லை. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் பேனர் வேறு. இந்த முறையாவது 'ஐ'டியாக்கள் வொர்க் அவுட் ஆகினவா?

மிஸ்டர் தமிழ்நாடு வசமான பிறகு மிஸ்டர் இந்தியா பட்டம் வெல்வதை குறிக்கோளாக கொண்டிருக்கிறான் பாடி பில்டர் லிங்கேசன். விளம்பர மாடல் தியா என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். தியாவுடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் வர மகிழ்ச்சியில் திளைக்கிறான். அதற்காக மிஸ்டர் இந்தியா கனவை கூட தியாகம் செய்யும் லிங்கேசனுக்கு பரிசாய் கிடைப்பது 'ஐ'எனும் Influenza வைரஸ் கிருமிதான். அது அவனுடைய உருவத்தையே அகோரமாக்கி விட பின்னணியில் இருந்தவர்களை எப்படி பழிதீர்க்கிறான்?

காதலுக்கு ஒன்று, சமூக பிரச்னைகளுக்கு ஒன்று என இரண்டே ஐட்டங்கள்தான் ஷங்கரின் மெனுவில் எப்போதும் இருக்கும். இப்போது காதலை கரம்பிடித்து இருக்கிறார். ஷங்கரின் வழக்கமான காதல் கதைகளில் இருந்து 'ஐ'எந்த அளவு மாறுபட்டு இருக்கும் எனும் சிந்தனையை தியேட்டர் வாசலில் இருக்கும் முயல் பொம்மையின் வயிற்றில் போட்டுவிட்டு உள்ளே செல்வதுதான் உத்தமம். அந்நியனில் சுட்ட பரோட்டாவை குளிர்பதன கிடங்கில் இருந்தெடுத்து சூடு பண்ணி தந்திருக்கிறார்கள். தட்ஸ் ஆல். 'டி.டி.ஆர்....'என நீங்கள் கதறினாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

மிரட்டல் ஜிம் பாடி, பக்கா மாடல் கெட்டப், வைரஸ் குதறிய உடல் என விக்ரமின் உழைப்பு எப்போதும் போல அபாரம். நடிப்பதை விட மாறுவேஷம் கட்டுவதில் கமலுக்கு தம்பியாக இருந்தாலும் அவை பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீராய் போகையில் வருத்தம்தான். சென்னை லோக்கல் தமிழில் தடுமாறுகிறார். முதல் பாதி முழுக்க 'மோடம்'என்ற வார்த்தையை வைத்தே சமாளிக்க நினைத்திருப்பது ஏனோ? காஸ்ட்யூம்கள் அனைத்தும் சிக்கென பொருந்துகிறது ஏமி ஜாக்சனுக்கு. நீச்சல் உடையில் இவர் நடந்து வரும்போது நாமும் 'ஏரிக்கரை'லிங்கேசனாவது உறுதி. காதல்தான் பிரதானம் என்றாகிவிட்ட பிறகு இருவருக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லாதபோது எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

கொஞ்சமே வந்தாலும் பவர் ஸ்டார் ராக்ஸ். 'நாலு பேரை போட்டுருக்கியா?'சந்தானம் காமடி சிக்கன் டிக்கா. மற்றபடி ஸ்பெஷலாய் ஒன்றுமில்லை. க்ளைமாக்ஸில் உடலால் ரணமானவர்களை கண்டு சந்தானம் கிண்டல் செய்யுமிடம் கசப்பின் உச்சம். இதை காமடி என்று சொல்வது அபத்தம். அதுபோல திருநங்கை கேரக்டரை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டிகள், சீனர் ஒருவரை 'சப்பை'என்று விக்ரம் சொல்வது போன்றவையெல்லாம் சகிக்கவில்லை. என்ன கொடும ஷங்கர் இது? உங்களை அண்ணாந்து பார்ப்பது தவறு என்று சொல்ல வருகிறீர்களா? 


பொதுவாக ஷங்கரின் படங்களில் துணை நடிகர்கள் தேர்வு சிறப்பாய் இருக்கும். ஆனால் இம்முறை அனைவருமே சொதப்பி இருப்பதற்கு  இயக்குனரின் தேர்வைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். சுரேஷ் கோபி, ராம்குமார், உபேன் படேல் என ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சுரத்தையற்ற பெர்பாமன்ஸை தந்திருப்பது பெரிய மைனஸ். 

'மெர்சலாயிட்டேன்'செவிக்கினிமை. 'ஆய்லா ஆய்லா'தொழில்நுட்ப அதிரடி. 'என்னோடு நீயிருந்தால்'அந்தோ பரிதாபம்.  ஷங்கர், மணிரத்னம், ரஜினி படங்களில் மட்டுமே கொஞ்சம் தம் கட்டி வாசித்து வந்தார் ரஹ்மான். இப்போதெல்லாம் அந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட ஆரம்பித்து விட்டார். விக்ரம் குல்பி ஐஸ் வண்டியை தள்ளும்போது மட்டும் பின்னணி இசை முன்னணியில்.

உடற்பயிற்சிக்கூடம், புகைவண்டி சண்டைகளில் விஷுவல் எபெக்ட்டுகள் கைகொடுத்து இருப்பதால் அனல் அரசுவை பெரிதாய் காக்காமல் போகிறது அவரது அடைமொழி. கூரைக்கு மேல் போடும் சைக்கிள் சண்டையை பீட்டர் மிங் நன்றாய் செய்திருக்கிறார். எனினும் 'அயன்'ஆப்ரிக்க சேஸ் அளவிற்கு பரபரப்பு இல்லாமல் போனது ஏமாற்றம்.

'எனக்கு இப்படி ஆகி இருந்தா நீ விட்டிருப்பியா'  வசனம், ஜில்லட் ப்ளேட் விளம்பரம், சைனா லொக்கேஷன் என சில இடங்களில் மட்டும் ஷங்கரின் டச் தெரிகிறது. செயற்கைக்காதல், அதிகமாய் அப்பி இருக்கும் அந்நியன் சாயல், டப்பா டான்ஸ் ஆடும் திரைக்கதை, அமெச்சூர்தனமான துணை நடிகர்கள் என சலிக்க வைக்கும் சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. படத்தின் நீளம் வேறு மூன்று மணிநேரம் ஒன்பது நிமிடங்கள். இப்படி நாம் சோதனைச்சாலை எலியாவோம் என முன்பே தெரிந்திருந்தால் கருட புராண தண்டனைகளில் ஒன்றை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கலாமே என பிரார்த்திக்க வைக்கும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

ஷங்கர் இயக்கியவற்றில் பாய்ஸ், சிவாஜி போன்றவைதான் முடியல சாமி லிஸ்டில் இருந்தன. அப்போதாவது ரஹ்மானும், மொட்டை பாஸ் ரஜினியும் முறையே பாய்ஸ் மற்றும் சிவாஜிக்கு முட்டு தந்தார்கள். இம்முறை 'எங்க... உங்கள நீங்களே தூக்கிக்காட்டுங்க'எனும் சவால் இருப்பதால் 'மிஸ்டர் தமிழ்நாடு'ஆகவே ஷங்கர் படாதபாடு பட வேண்டி இருக்கும். 'மிஸ்டர் இந்தியா'கனவை நிறைவேற்ற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்பதற்கு 'ஐ'நிச்சயம் ஒரு Eye ஓப்பனர் என்பதில் ஐயமில்லை.


Written for tamil.jillmore.com   
.......................................................................



 
Viewing all 63 articles
Browse latest View live